உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

என்​எல்சி தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்பு சார்​பில் நிர்​வா​கத்​தி​டம் ஸ்டி​ரைக் நோட்​டீஸ்

நெய்வேலி, நவ. 20:​

என்​எல்சி தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்பு சார்​பில் நிர்​வா​கத்​தி​டம்
வெள்​ளிக்​கி​ழமை ஸ்டி​ரைக் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது.​ ​

என்​எல்சி தொழி​லா​ளர்​க​ளுக்​கான புதிய போனஸ் மற்​றும் ஊக்க ஊதி​யம்,​ தொழி​லா​ளர்​க​ளுக்கு எதி​ரான நட​வ​டிக்​கையை கைவிட வேண்​டும் என்று வலி​யு​றுத்தி தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்பு சார்​பில் தொடர் போராட்ட நட​வ​டிக்கை ​ அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ ​ அதன்​படி வெள்​ளிக்​கி​ழமை தொழி​லா​ளர்​கள் ஊர்​வ​ல​மா​கச் சென்று நிர்​வா​கத்​தி​டம் ஸ்டி​ரைக் நோட்​டீஸ் வழங்​கு​வது என முடி​வு​செய்​யப்​பட்​டது.​ ​ அதற்​கான ஊர்​வ​லம் அம்​பேத்​கர் சிலை​ய​ருகே தொடங்​கி​யது. இந்த ஊர்​வ​லத்​துக்கு எச்​எம்​எஸ் சங்​கத் தலை​வர் சுகு​மார் தலைமை வகித்​தார். சிஐ​டியு சங்க தலை​வர் குப்​பு​சாமி ஊர்​வ​லத்​தைத் தொடங்​கி​வைத்​தார். ஊர்​வ​லத்​தில் 2 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட தொழி​லா​ளர்​கள் கலந்​து​கொண்​ட​னர். ஊர்​வ​லம் என்​எல்சி தலைமை அலு​வ​ல​கத்​தில் முடி​வ​டைந்​த​தை​ய​டுத்து,​ தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்​பைச் சேர்ந்த நிர்​வா​கி​கள்,​ நிறு​வன தலைமை அலு​வ​ல​கத்​தில் உள்ள நிர்​வா​கத்​துறை அதி​கா​ரியை சந்​தித்து ஸ்டி​ரைக் நோட்​டீஸ் வழங்​கி​னர்.​ ​ இதைத் தொடர்ந்து நவம்​பர் 24-ம் தேதி நெய்வேலி நக​ரின் முக்​கி​யப் பகு​தி​க​ளில் தெரு​மு​னைப் பிர​சா​ரம் செய்​ய​வி​ருப்​ப​தாக எச்​எம்​எஸ் சங்​கத் தலை​வர் சுகு​மார் தெரி​வித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior