உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

வேன்​க​ளில் சிக்​கித் தவிக்​கும் சிறார்​கள்

நெய்வேலி, ​ நவ. 19:

வெகு தொலை​வில் இருந்து நெய்​வே​லி​யில் உள்ள பள்​ளி​க​ளுக்கு வேன் மூலம் வரும் இளம் சிறார்​கள் சொல்லி மாளாத் துய​ரத்​துக்கு ஆளா​கின்​ற​னர்.​ கட​லூர் மாவட்​டத்​தில் நெய்​வே​லி​யில் உள்ள சில பள்​ளி​கள் சிறந்து விளங்​கு​வ​தால் அப்​பள்​ளி​க​ளில் நெய்​வே​லி​யைச் சுற்​றி​யுள்ள ஊர்​க​ளில் இருந்து ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ,​மாண​வி​யர் படித்​து​வ​ரு​கின்​ற​னர். இவர்​கள் பலர் தனி​யார் வேன் மூலமே வரு​வ​தால் 35-க்கும் மேற்​பட்ட வேன்​கள் தினந்​தோ​றும் நெய்வேலி வந்து செல்​கின்​றன. மேலும் பல மாண​வர்​கள் பஸ்​கள் மூலம் வந்து செல்​கின்​ற​னர்.​ இந்த வேன்​க​ளில் குறைந்​த​பட்​சம் 25 மாண​வர்​கள் முதல் 30 மாண​வர்​கள் வரை திணிக்​கப்​பட்டு அழைத்து வரப்​ப​டு​கின்​ற​னர். இவர்​க​ளின் புத்​த​கப் பைகள் வேனில் இட​மில்​லா​மல் சரக்கு மூட்​டை​கள் போல் வேனின் கூரை​யில் அடுக்கி வைக்​கப்​பட்டு கொண்டு வரப்​ப​டு​கின்​றன. பள்ளி வந்​த​வு​டன் மாண​வர்​கள் அவ​சர அவ​ச​ர​மாக இறக்​கப்​பட்டு,​அவர்​க​ளின் புத்​த​கப் பைக​ளும் தூக்கி வீசப்​ப​டு​வது வாடிக்​கை​யாகி வரு​கி​றது.​ மாண​வர்​கள் வீட்டி​லி​ருந்து கிளம்​பும் போது அவ​ச​ர​மாக புறப்​பட்டு,​ வேன்​க​ளில் போதிய இட​மில்​லா​மல்,​ஒரு​வர் மீது ஒரு​வர் அமர்ந்​து​கொண்டு பள்​ளிக்கு வரு​கின்​ற​னர். இத​னால் அவர்​க​ளுக்கு கவ​னச் சித​றல் ஏற்​ப​டு​கி​றது.​ ​ பெற்​றோர்​க​ளும் பிள்​ளை​களை கிளப்​பி​விட்​டால் போதும் என்ற மனோ​பா​வத்​து​டன் செயல்​ப​டு​வ​தால் பிள்​ளை​கள் பள்​ளிக்கு குறித்த நேரத்​தில் சென்​றார்​களா என்​ப​தைக் கூட அவர்​கள் உறுதி செய்து கொள்​வது கிடை​யாது​ ​ மற்​றொரு பிரச்​னை​யை​யும் பெற்​றோர்​கள் கவ​னத்​தில் கொள்​ளா​தது பெரும் ஆச்​ச​ரி​யம் அளிக்​கக்​கூ​டி​ய​தாக உள்​ளது. தங்​கள் பிள்​ளை​களை ஏற்​றிச் செல்​லும் வாக​னத்​துக்கு முறை​யான ஓட்​டு​நர் இருக்​கி​றாரா,​ வேனுக்​கு​ரிய ஆவ​ணங்​கள் உள்​ளதா என்​ப​தைப் பற்​றி​யெல்​லாம் விசா​ரிக்​கா​ம​லேயே பிள்​ளை​களை அனுப்​பி​வி​டு​கின்​ற​னர்.​ வேன் ஓட்​டு​ந​ரும்,​ தனது வரு​மா​னத்தை மன​தில் கொண்டு,​ கணக்​கி​ல​டங்கா மாணவ,​ மாண​வி​யர்​களை ஏற்​றிக்​கொண்டு,​ வேக​மாக வேனை ஓட்​டிச் செல்​வ​தன் விளைவு,​ விபத்​தில் முடி​வ​டை​கி​றது. அண்​மை​யில் விருத்​தா​ச​லத்​தில் இருந்து மாண​வர்​களை ஏற்​றி​வந்த வேன் மந்​தா​ரக்​குப்​பம் அருகே கவிழ்ந்​த​தில் 20-க்கும் மேற்​பட்ட மாண​வர்​கள் காய​ம​டைந்​த​னர்.​ ​ மாண​வர்​கள் குறித்த நேரத்​தில் வீட்டி​லி​ருந்து கிளம்​பி​யும்,​ வேன் ஓட்​டு​நர்​கள் தாம​தத்​தால்,​ குறித்த நேரத்​திற்கு பள்​ளிக்கு வந்து சேர​மு​டி​யா​மல் ​ பள்ளி நிர்​வா​கத்​தின் தண்​ட​னைக்கு ஆளாக நேரி​டு​கி​றது.​ தங்​கள் பிள்​ளை​கள் சிறந்த பள்​ளிக்கு சென்று வந்​து​விட்​டால் போதும். அவன் தானா​கவே படித்​து​வி​டு​வான் என்ற மனோ​பா​வம் பெரும்​பா​லான பெற்​றோர்​க​ளி​டம் நில​வு​கி​றது. இந்த விப​ரீத மனோ​பா​வம் பிள்​ளை​க​ளின் எதிர்​கா​லத்தை பாழாக்​கி​வி​டும் என்​பதை ஏனோ பெற்​றோர்​கள் உண​ரு​வ​தில்லை.​ பெற்​றோர்​கள் முடிந்​த​வ​ரை​யில் சிறார்​களை தங்​கள் குடி​யி​ருப்​பு​க​ளுக்கு அரு​கா​மை​யில் உள்ள கல்வி நிறு​வ​னங்​க​ளில் பயி​லச் செய்து அவர்​கள் ஓர​ளவு வளந்த பின்​னர் அவர்​களை சற்று தூரத்​தில் உள்ள பள்​ளி​க​ளுக்கு அனுப்​பு​வது மாண​வர்​க​ளின் எதிர்​கா​லத்​துக்கு சிறந்​த​தாக அமை​யும்.
சிந்​திப்​பார்​களா பெற்​றோர்​கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior