உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

காசோலை மோசடி:​ சேலம் அரிசி வியா​பாரி கைது

கட ​லூர்,​ நவ. 19: ​

ரூ. 8.21 லட்​சம் காசோலை கொடுத்து மோசடி செய்​த​தாக சேலத்​தைச் சேர்ந்த அரிசி வியா​பா​ரி​யைப் போலீ​ஸôர் வியா​ழக்​கி​ழமை கைது செய்​த​னர். ​​ சேலத்​தைச் சேர்ந்​த​வர் கிருஷ்​ண​மூர்த்தி ​(55). அவ​ரது மனைவி தில​கம் ​(48). இரு​வ​ரும் பல்​வேறு இடங்​க​ளில் இருந்து அரிசி வாங்கி மொத்த வியா​பா​ரம் செய்து வரு​கின்​ற​னர். இவர்​கள் கட​லூரை அடுத்த பெரிய பிள்​ளை​யார் மேடு கிரா​மத்​தில் உள்ள அரிசி ஆலை ஒன்​றில் இருந்து ரூ. 8.21 லட்​சம் மதிப்​பி​லான அரி​சி​யைக் கொள்​மு​தல் செய்​துள்​ள​னர். ​​ அதற்​காக கிருஷ்​ண​மூர்த்தி ரூ. 8.21 லட்​சத்​துக்​குக் வங்​கிக் காசோலை அளித்​துள்​ளார். மனைவி பெய​ரில் இருந்த கணக்​கில் இருந்து ராமச்​சந்​தி​ரன் என்​ப​வர் பெய​ரில் அந்​தக் காசோலை அளிக்​கப்​பட்டு இருந்​த​தாம்,​ ஆனால் காசோ​லையை அரிசி ஆலை உரி​மை​யா​ளர் துரை​ராஜ் வங்​கி​யில் சமர்ப்​பித்​த​போது,​ காசோலை வழங்​கப்​பட்ட வங்​கிக் கணக்கு நிலு​வை​யில் இல்லை என்று திரும்​பி​யது. ​இது​கு​றித்து துரை​ராஜ் கட​லூர் மாவட்​டக் குற்​றப் புல​னாய்​வுப் போலீஸ் பிரி​வில் புகார் செய்​தார். போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​னர். ​ இது​தொ​டர்​பாக கிருஷ்​ண​மூர்த்​தியை கைது செய்​த​னர். அவ​ரது மனைவி தில​கத்​தைத் தேடி வரு​கி​றார்​கள். ​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior