உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

போக்​கு​வ​ரத்து ​ஊழி​யர்​கள் போராட்டம்

​ கட​லூர்,​ நவ. 19:

கட​லூர் மாவட்ட வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்​துத் துறை பணி​யா​ளர்​கள் செவ்​வாய்க்​கி​ழமை கறுப்​புச் சின்​னம் அணிந்து அலு​வ​ல​கங்​க​ளுக்கு வந்து இருந்​த​னர். ​​ வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்​துறை அலு​வ​ல​கங்​க​ளில் காலி​யாக இருக்​கும் பணி இடங்​களை நிரப்ப வேண்​டும்,​ தொழில் நுட்​பப் பிரி​வி​னர் மற்​றும் தொழில்​நுட்​பப் பிரிவு அல்​லாத அமைச்​சுப் பணி​யா​ளர்​க​ளி​டையே பார​பட்​ச​மாக நடந்து கொள்​ளும் போக்​கைக் கைவிட வேண்​டும் என்ற கோரிக்​கைளை வலி​யு​றுத்தி,​ தமிழ்​நாடு போக்​கு​வ​ரத்​துப் பணி​யா​ளர்​கள் ஒன்​றி​யத்​தைச் சேர்ந்த ஊழி​யர்​கள் கறுப்​புச் சின்​னம் அணிந்து வேலைக்கு வந்​தி​ருந்​த​னர். டிசம்​பர் 2-ம் தேதி மாநி​லம் முழு​வ​தும் அனைத்து ​ஊழி​யர்​க​ளும் ஒட்​டு​மொத்த சிறு​வி​டுப்பு எடுக்​கப் போவ​தா​க​வும் அறி​வித்​த​னர். ​ ​​ இது​கு​றித்து அர​சுப் பணி​யா​ளர் சங்க மாநி​லத் தலை​வர் கு.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​​ தமிழ்​நாடு அரசு போக்​கு​வ​ரத்​துத் துறை​யில் 900 பணி​யி​டங்​கள் காலி​யாக உள்​ளன. 300 உத​வி​யா​ளர் பணி​யி​டங்​க​ளில் நிரப்​பப் படா​மல் உள்​ளன. ​​ ஒழுங்கு நட​வ​டிக்கை,​ பத​வி​உ​யர்வு,​ தளர்​வாணை வழங்​கு​தல் போன்​ற​வற்​றில் தொழில்​நுட்​பப் பணி​யா​ளர்​க​ளுக்​கும் அமைச்​சுப் பணி​யா​ளர்​க​ளுக்​கும் இடையே பார​பட்​சம் காட்​டப்​ப​டு​கி​றது. பணி சீர​மைப்​புக்​காக இத்​து​றை​யில் ஏற்​ப​டுத்​தப்​பட்ட துணைப் போக்​கு​வ​ரத்து நிர்​வாக ஆணை​யத்​தின் அதி​கா​ரி​க​ளுக்கு அதி​கா​ரம் வழங்​கப்​ப​டா​மல் உள்​ளது.​ 10 அம்​சக் கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி போராட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior