உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

ஆலைக் கழி​வு​க​ளால் விளை நிலங்​கள் பாதிப்பு

கட ​லூர், ​நவ. 20:​

சர்க்​கரை ஆலைக் கழி​வு​க​ளால் விளை நிலங்​கள் பாதிக்​கப்​பட்​டது குறித்து தகுந்த நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்
வெள்​ளிக்​கி​ழமை தெரி​வித்​தார். ​​ ​
கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலை​மை​யில் நடந்​தது. நெல்​லிக்​குப்​பம் சர்க்​கரை ஆலைக் கழி​வு​க​ளால் 100 ஏக்​கர் விளை நிலங்​கள் பாதிக்​கப்​பட்டு இருப்​ப​தாக,​ மாவட்ட விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்​கச் செய​லா​ளர் ரவீந்​தி​ரன் உள்​ளிட்ட விவ​சா​யி​கள் புகார் தெரி​வித்​த​னர். அதற்​குப் பதில் அளித்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​யது:​ ​​ ​ விளை நிலங்​களை மாசுக் கட்​டுப்​பாடு வாரிய அலு​வ​லர்​கள் பார்​வை​யிட்​ட​னர். பாதிப்பு இரு வகை​யில் ஏற்​பட்டு இருக்​க​லாம். ஆலைக் கழி​வு​க​ளும் வெளி​யே​று​கின்​றன. நெல்​லிக்​குப்​பம் நக​ராட்​சிக் கழி​வு​க​ளும் அப்​ப​கு​தி​யில் வெளி​யே​று​கின்​றன. சர்க்​கரை ஆலைக் கழி​வு​க​ளைப் போல் நக​ராட்​சிக் கழி​வு​க​ளும் மோச​மா​னவை. ​ சல​வைத் தூள்​க​ளில் இப்​போ​தெல்​லாம் மிக மோச​மான ரசா​ய​னங்​கள் கலக்​கப்​ப​டு​கின்​றன. அத​னால்​தான் அழுக்கு படிந்த துணி​களை பிரஷ் வைத்​துத் தேய்க்க வேண்​டாம் என்​றெல்​லாம் விளம்​ப​ரப்​ப​டுத்த தொடங்​கி​விட்​ட​னர். ​​ ​ எனவே ஆலைக் கழி​வு​கள்,​ நக​ராட்​சிக் கழி​வு​கள்,​ வயல்​க​ளில் தேங்கி உள்ள கழி​வு​கள்,​ நிலத்​தடி நீர் போன்​ற​வற்றை ஆய்வு செய்ய மாசுக் கட்​டுப்​பாடு வாரி​யத்​துக்கு உத்​த​ர​விட்டு இருக்​கி​றேன். இப்​பி​ரச்​னைக்​குத் தீர்வு காண ஒருங்​கி​ணைந்த திட்​டம் வகுக்​கப்​ப​டும். சம்​பந்​தப்​பட்​ட​வர்​க​ளுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்டு நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும். என்​றார் ஆட்​சி​யர்.​ ​ ஆட்​சி​யர் மேலும் கூறி​யது:​​ சிதம்​ப​ரம் புற​வ​ழிச் சாலை​யால் விவ​சா​யத்​துக்கு ஏற்​பட்டு இருக்​கும் பாதிப்​பு​கள் குறித்து மத்​திய அர​சின் சாலைப் பிரிவு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். இதற்​கா​கத் தனித் திட்​டம் தயா​ரித்து நிறை​வேற்ற வேண்​டும். சிதம்​ப​ரம் நக​ராட்​சிக் கழி​வு​கள் கான்​சா​கிப் பாசன வாய்க்​கா​லில் கலப்​ப​தைத் தடுக்க,​ சிதம்​ப​ரம் நக​ராட்சி தனி சுத்​தி​க​ரிப்பு நிலை​யம் அமைக்க வேண்​டும். ​​ வெள்​ளப் பாதிப்​பு​க​ளுக்கு நிரந்​தத் தீர்வு காணப்​ப​டும். கிரா​மப் புறங்​க​ளில் ஏரா​ள​மான களங்​கள் காணப்​ப​டு​கின்​றன. தனி​யார் கள​மாக இருந்​தா​லும்,​ அவற்றை மேம்​ப​டுத்த நமக்​கு​நாமே திட்​டத்​தில் நிதி வழங்​கத் தயா​ராக இருக்​கி​றேன் என்​றார் ஆட்​சி​யர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior