உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

பிஎஸ்என்எல் ஊழி​யர்​கள் ​உண்​ணா​வி​ர​தம்

கட​லூர்,​ நவ.19: ​ ​

பி.எஸ்.என்.எல். ஊழி​யர்​கள் சங்​கத்​தி​னர் கட​லூ​ரில் வியா​ழக்​கி​ழமை உண​ணா​வி​ர​தம் . சென்னை சி.டி.எஸ். பகு​தி​யில் பணி​நீக்​கம் செய்​யப்​பட்ட 6 ஒப்​பந்த் தொழி​லா​ளர்​களை மீண்​டும் வேலைக்கு எடுத்​துக் கொள்ள வேண்​டும். கார்ப்​ரேட் அலு​வ​லக வழி​காட்​டுத​லின்​படி ஒப்​பந்த ஊழி​யர்​க​ளுக்கு,​ ஊதி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும்,​ ஒப்​பந்த ஊழி​யர்​க​ளின் ஊதி​யத்​தில் இருந்து இ.பி.எஃப்., இ.எஸ்.ஐ. பிடித்​தம் செய்​வதை உறுதி செய்ய வேண்​டும் என்ற கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி இந்த உண்​ணா​வி​ர​தம் நடந்​தது.​ மாவட்​டப் பொது​மே​லா​ளர் அலு​வ​ல​கம் அருகே நடந்த இந்த உண்​ணா​வி​ர​தத்​துக்கு பி.எஸ்.என்.எல். ஊழி​யர் சங்க மாவட்​டத் தலை​வர் ஐ.எம்.மதி​ய​ழ​கன் தலைமை தாங்​கி​னார். கட​லூர் நகர அனைத்​துக் குடி​யி​ருப்​போர் நலச் சங்​கக் கூட்​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் மு.மரு​தா​வா​ணன் தொடங்கி வைத்​துப் பேசி​னார்.​ பி.எஸ்.என்.எல். ஊழி​யர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் கே.டி.சம்​பந்​தம்,​ தமிழ்​நாடு தொலைத்​தொ​டர்பு ஒப்​பந்​தத் தொழி​லா​ளர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் ஏ.அண்​ணா​மலை உள்​ளிட்ட பலர் உண்​ணா​வி​ர​தத்​தில் பங்​கேற்​ற​னர்.​ கோரிக்​கை​களை விளக்கி தொழிற்​சங்க நிர்​வா​கி​கள் முத்​துக்​கு​மா​ர​சாமி,​ முத்​து​வேல்,​ ஜி.கோவிந்​த​ரா​ஜுலு,​ எஸ்.பழநி,​ பி.ராஜேந்​தி​ரன்,​ என்.முக​மது இக்​பால்,​ கே.வெங்​கட்​ர​ம​ணன் ஆகி​யோர் பேசி​னர். மாவட்ட அமைப்​புச் செய​லா​ளர் சாரங்​க​பாணி நன்றி கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior