உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

கொள்​ளைக் கூட்டு சதி​யில் ஈடு​பட்ட 4 பேர் கைது

​ சிதம்​ப​ரம்,​ நவ. 20:​

கொள்​ளை​ய​டிப்​ப​தற்​காக கூட்டு சதி​யில் ஈடு​பட்​டி​ருந்த தமி​ழர் விடு​த​லைப்​படை இயக்​கத்​தைச் சேர்ந்​த​வர் உள்​ளிட்ட 4 பேரை சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர் தலை​மை​யி​லான தனிப்​படை போலீ​ஸôர் வியா​ழக்​கி​ழமை கைது செய்​த​னர். அவர்​க​ளி​ட​மி​ருந்து கைத்​துப்​பாக்​கியை போலீ​ஸôர் பறி​மு​தல் செய்​த​னர்.​ ​ திருட்டு மற்​றும் கொள்​ளைச் சம்​ப​வங்​களை தடுக்​க​வும்,​ குற்​றச்​செ​யல்​க​ளில் ஈடு​பட்டு வரும் ரவு​டி​களை பிடிக்​க​வும் சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர் தலை​மை​யி​லான தனிப்​ப​டையை மாவட்ட போலீஸ் சூப்​ரண்​டன்ட் அஸ்​வின்​கோட்​னீஷ் அமைத்​துள்​ளார். இந்​நி​லை​யில் தனிப்​படை போலீ​ஸôர் தங்​க​ளுக்கு கிடைத்த தகவ​லின் பேரில் விருத்​தா​ச​லம் பகு​தி​யில் மணி​முத்​தாறு செல்​லி​யம்​மன்​கோ​வில் பின்​பு​றம் திடீர் சோதனை மேற்​கொண்​ட​னர்.​ ​ அப்​போது கொள்​ளை​ய​டிப்​ப​தற்​காக கூட்டு சதி​யில் ஈடு​பட்​டி​ருந்த மத்​திய ரிசர்வ் ​ போலீஸ் படையி​லி​ருந்து பணி​நீக்​கம் செய்​யப்​பட்ட அரி​ய​லூர் மாவட்​டம் கொக்​க​ர​சன்​பேட்​டை​யைச் சேர்ந்த தியா​க​ரா​ஜன் ​(36), தமி​ழர் விடு​த​லைப்​படை இயக்​கத்​தில் உள்ள விருத்​தா​ச​லத்​தைச் சேர்ந்த அசோக்​கு​மார் ​(28), அரி​ய​லூர் மாவட்​டம் ஆண்​டி​ம​டத்​தைச் சேர்ந்த கருக்கை ஜெயக்​கு​மார் ​(26), விருத்​தா​ச​லம் பழ​ம​லை​நா​தர் நக​ரைச் சேர்ந்த ஆனந்​தன் ​(21) ஆகிய 4 பேரை போலீ​ஸôர் கைது செய்​த​னர். மேலும் அவர்​க​ளி​ட​மி​ருந்து கைத்​துப்​பாக்கி ஒன்​றை​யும் போலீ​ஸர் பறி​மு​தல் செய்​த​னர். இது​கு​றித்து விருத்​தா​ச​லம் போலீ​ஸôர் வழக்​குப் பதிந்​துள்​ள​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior