உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

அரசுக் கட்​ட​டம் இடிக்​கும் பணி ஒத்திவைப்பு

​சிதம்​ப​ரம்,​ நவ. 18:​

சிதம்​ப​ரத்தை அடுத்த முகை​யூர் கிரா​மத்​தில் தனி​யார் நிலத்​தில் கட்​டப்​பட்​டுள்ள கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கம்,​ ஊராட்சி அலு​வ​ல​கம் ஆகி​ய​வற்றை இடித்து உரி​மை​யா​ள​ரி​டம் ஒப்​ப​டைக்​கு​மாறு சிதம்​ப​ரம் மாவட்ட முதன்மை உரி​மை​யி​யல் நீதி​மன்​றம் ஆணை பிறப்​பித்​துள்​ளது. ​ ​ நீதி​மன்ற உத்​த​ர​வின்​படி புதன்​கி​ழமை பொக்​லை​னு​டன் கட்​ட​டத்தை ஊழி​யர்​கள் இடிக்​கச் சென்​ற​னர். ஆனால் கிராம நிர்​வாக அலு​வ​லர் உடல்​நிலை சரி​யில்​லா​மல் விடுப்​பில் இருந்​த​தால் அலு​வ​ல​கக் கட்​ட​டம் இடிப்​பது ஒத்தி வைக்​கப்​பட்​டது.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த முகை​யூர் கிரா​மத்​தில் பொன்​முடி என்​ப​வ​ரது மனைவி மல்​லிகா என்​ப​வ​ருக்​குச் சொந்​த​மான இடத்​தில் கீரப்​பா​ளை​யம் பஞ்​சா​யத்து யூனி​யன் சார்​பில் கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​க​மும்,​ ஊராட்சி அலு​வ​ல​க​மும் கட்​டப்​பட்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. இது​கு​றித்து சிதம்​ப​ரம் நீதி​மன்​றத்​தில் மல்​லிகா வழக்கு தொடுத்​தார். வழக்கு விசா​ரணை முடி​வுற்று கடந்த 28-2-2006-ல் அலு​வ​ல​கக் கட்​ட​டத்தை இடித்து நிலத்தை உரி​மை​யா​ள​ரி​டம் ஒப்​ப​டைக்​கு​மாறு நீதி​பதி தீர்ப்​ப​ளித்​தார்.​ ​ ஆனால் இது​வரை அந்த இடத்தை கீரப்​பா​ளை​யம் வட்​டார வளர்ச்சி அலு​வ​லர் ​ ஒப்​ப​டைக்​கா​த​தால் ஜப்தி செய்து ஒப்​ப​டைக்​கு​மாறு மனு​தா​ரர் மல்​லிகா சிதம்​ப​ரம் மாவட்ட உரி​மை​யி​யல் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். மனு​வின் மீது விசா​ரணை நடத்​திய நீதி​பதி சாந்தி அலு​வ​ல​கக் கட்​ட​டத்தை இடித்து உரி​மை​யா​ள​ரி​டம் ஒப்​ப​டைக்​கு​மாறு உத்​த​ர​விட்​டார். அதன்​பே​ரில் புதன்​கி​ழமை நீதி​மன்ற ஊழி​யர்​கள் கட்​ட​டத்தை இடிக்க பொக்​லை​னு​டன் சென்​ற​னர். கிராம நிர்​வாக அலு​வ​லர் விடு​மு​றை​யில் சென்​றி​ருந்​த​தால் இடிப்​பதை ஒத்​தி​வைத்து திரும்​பி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior