உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

நீர் நிலை​கள் ஆக்​கி​ர​மிப்​பால் வீணா​கும் மழை நீர்

பண் ​ருட்டி,​ நவ.19:

நீர் நிலை​கள் ஆக்​கி​ர​மிப்பு கார​ணத்​தால் மழை காலத்​தில் கிடைக்​கும் மழை நீர் வீணா​வ​து​டன்,​ வயல் வெளி​யில் பாய்ந்து விவ​சா​யப் பயிர்​கள் சேதம் அடை​கின்​றன.​ ​ பண்​ருட்டி வட்​டத்​தில் அண்​மை​யில் பெய்த கன மழை​யால் பல ஆயி​ரக் கணக்​கான விவ​சாய விளை நிலங்​கள் தண்​ணீ​ரில் மூழ்கி சேதம் அடைந்​தன. நீர் நிலை ஆக்​கி​ர​மிப்பு மற்​றும் நீர் வழி ஆக்​கி​ர​மிப்​பால் மழை நீர் செல்ல வழி​யின்​றியே இச் சேதம் ஏற்​பட்​டுள்​ளது.​ பண்​ருட்டி நக​ரம் மற்​றும் பண்​ருட்டி,​ அண்​ணா​கி​ரா​மம் ஒன்​றி​யப் பகு​தி​க​ளில் 28 ஏரி​கள் உள்​ளன. இந்த ஏரி​க​ளின் மூலம் ​ 3175 ஹெக்​டர் விவ​சாய நிலங்​கள் பாசன வசதி பெறு​கின்​றன. தமி​ழ​கத்​தில் கடந்த இரு வாரங்​க​ளாக பெய்த மழை​யால் நத்​தம்,​எலந்​தம்​பட்டு,​ சேமக்​கோட்டை,​ எழு​மேடு,​அவி​ய​னூர் பைத்​தாம்​பாடி,​ கரும்​பூர்,​ உளுந்​தாம்​பட்டு,​ அக்​க​ட​வள்ளி,​ கண்​ட​ரக்​கோட்டை,​ புல​வ​னூர்,​ வீரப்​பார்,​ விசூர் உள்​ளிட்ட ​ ஊர்​க​ளில் உள்ள 15 ஏரி​கள் நிரம்பி வழி​கின்​றன. மேலும் உள்ள 13 ஏரி​க​ளில் நீர் மட்​டம் உயர்ந்து வரு​கி​றது.​ ​ ​ இவற்​றில் பெரும்​பா​லான ஏரி​கள் ஆக்​கி​ர​மிப்பு செய்​யப்​பட்டு நெல்,​ கரும்பு போன்ற பயிர்​கள் பயி​ரி​டப்​பட்​டுள்​ளன. இந்த ஆக்​கி​ர​மிப்​பால் ஏரி​யின் நீர்ப் பிடிப்பு பகுதி குறைந்து உள்​ள​து​டன்,​ ஏரி​யில் பயி​ரி​டப்​பட்ட பயிர்​களை பாது​காக்க ஏரி​யின் நீர் வெளி​யேற்​றப்​ப​டு​கி​றது. இத​னால் மழைக்​கா​லத்​தில் நீர்ப் பிடிப்பு பகு​தி​யில் மழை மற்​றும் வெள்ள நீர் தேங்​கா​மல் ஏரி​கள் குறு​கிய காலத்​தில் வற்​றி​வி​டு​கின்​றது.பண்​ருட்டி மற்​றும் அண்​ணா​கி​ராம பகு​தி​யில் உள்ள பெரும்​பா​லான ஏரி​களை உள்​ளூர் அர​சி​யல் பிர​மு​கர்​கள் ஆக்​கி​ர​மித்து வைத்​துள்​ள​னர். இவர்​கள் கட்​டுப்​பாட்​டில் உள்ள ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற அதி​கா​ரி​க​ளும் முன் வரு​வ​தில்லை. மேலும் சிலர் தங்​கள் நிலத்​தின் அருகே உள்ள ஆறு,​ ஏரி,​ குளம்,​ குட்டை கால்​வாய்,​ ஓடை ஆகி​ய​வற்றை ஆக்​கி​ர​மித்து தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்​துள்​ள​னர். இத​னால் உபரி நீர் வெளி​யேற வழி​யின்றி விவ​சாய நிலங்​க​ளில் புகுந்து சேதத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது. ​ நீர்​வள ஆதார அமைப்​பு​கள் ​(பாசன பிரிவு)​ மூலம் ஏரி,​ ஆறு,​ கால்​வாய்,​ குளம் போன்​றவை பரா​ம​ரிக்​கப்​ப​டு​கின்​றன. ​ இவற்றை பரா​ம​ரிக்க அரசு ஒதுக்​கும் நிதியை,​ நீர்​வள ஆதார அமைப்​பு​கள் முறை​யா​கப் பயன்​ப​டுத்​து​வ​தில்லை என குற்​றச்​சாட்டு எழு​கி​றது. இந்த அமைப்​பு​கள் பண்​ருட்டி வட்​டத்​தில் இவற்றை சீர் செய்​ய​வில்லை,​ இவற்றை முறை​யாக செய்​தி​ருந்​தால் மழை காலத்​தில் தண்​ணீர் வீணா​கா​மல் சேமிக்​கப்​ப​டு​வ​து​டன்,​ விவ​சாய நிலங்​க​ளுக்​கும் பாதிப்பு இருக்​காது என சமூக ஆர்​வ​ளர்​கள் தெரி​விக்​கின்​றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior