உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

தடை செய்​யப்​பட்ட அமைப்​பைச் சேர்ந்​த​வர் கைது

சிதம் ​ப​ரம்,​ நவ. 19: ​

சிதம்​ப​ரம் அருகே தடை செய்​யப்​பட்ட தமி​ழர் விடு​த​லைப் படை​யைச் சேர்ந்​த​வர் துப்​பாக்​கி​யு​டன் கைது செய்​யப்​பட்​டார்.​ கட​லூர் மாவட்​டத்​தில் முக்​கி​யக் குற்​றங்​களை கண்​டு​பி​டிக்​க​வும்,​ தீவி​ர​வா​தி​கள் நட​மாட்​டத்தை கண்​கா​ணிக்​க​வும் மாவட்ட காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஷ்,​ ​ சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர் தலை​மை​யிóல் தனிப்​படை அமைத்து கண்​கா​ணித்து வந்​தார்.​ இந்​நி​லை​யில் சிதம்​ப​ரத்தை அடுத்த திரு​முட்​டம் போலீஸ் சர​கம் கொக்​க​ர​சன்​பேட்டை கிரா​மத்​தில் துப்​பாக்கி மற்​றும் வீச்​ச​ரி​வா​ளு​டன் தங்​கி​யி​ருந்த தியா​க​ரா​ஜன் என்​ப​வரை சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர் தலை​மை​யி​லான தனிப்​ப​டை​யி​னர் வியா​ழக்​கி​ழமை பிடித்​த​னர்.​ தியா​க​ரா​ஜன் கொடுத்த தகவ​லின் பேரில் மேலும் 3 பேரை கட​லூர் மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​க​ளில் தனிப்​படை போலீ​ஸôர் பிடித்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர். பிடி​பட்​ட​வர்​கள் அனை​வ​ரும் தடை செய்​யப்​பட்ட தமி​ழர் விடு​த​லைப்​படை இயக்​கத்​தைச் சேர்ந்​த​வர்​கள் என போலீஸ் தரப்​பில் கூறப்​ப​டு​கி​றது. இவர்​கள் கட​லூர் மாவட்​டத்​தில் பல்​வேறு குற்​றச்​செ​யல்​க​ளில் ஈடு​பட்​டுள்​ள​தா​க​வும்,​ இதில் மேலும் சிலர் சிக்​கு​வார்​கள் என​வும் கூறப்​ப​டு​கி​றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior