உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

108 ஆம்​பு​லன்ஸ் வாக​னத்தால் 2 லட்​சம் பேருக்கு பயன்

கடலூர்,​​ ​ டிச.8: ​ ​ 

                    தமி​ழ​கத்​தில் 108 ஆம்​பு​லன்ஸ் வாக​னம் அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​டது முதல் இது​வரை 1.98,691 பேர் அதன் மூலம் பயன் அடைந்​தி​ருப்​ப​தாக மக்​கள் நல்​வாழ்​வுத்​துறை அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார்.​

               க​ட​லூர் அருகே பச்​சை​யாங்​குப்​பம்,​​ வெள்​ளக்​கரை,​​ கும​ளங்​கு​ளம்,​​ ஆகிய ஊராட்​சி​க​ளைச் சேர்ந்த 7,142 பேருக்கு இல​வச கலர் டி.வி.யை அமைச்​சர் எம்.ஆர்.கே.​ பன்​னீர்​செல்​வம் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்த விழாக்​க​ளில் வழங்​கி​னார்.​     

               வெள்​ளக்​கரை ஊராட்​சி​யில் ரூ.​ 13 லட்​சத்​தில் கட்​டப்​பட்ட கூடு​தல் வகுப்​ப​றை​களை அமைச்​சர் திறந்து வைத்​தார்.​  விழா​வில் அமைச்​சர் பேசி​யது:​

                க​ட​லூர் மாவட்​டத்​தில் இது​வரை 565 ஊராட்​சி​க​ளில் 2,99,867 இல​வச கலர் டி.வி.க்கள் வழங்​கப்​பட்டு உள்​ளன.​  48,358 பேருக்கு முதி​யோர் உத​வித்​தொகை,​​ 7,156 பேருக்கு 2,894 ஏக்​கர் இல​வச நிலம் வழங்​கப்​பட்டு உள்​ளது.​ 6,492 மாண​வர்​க​ளுக்கு கண் சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது.​

             ப​ரங்​கிப்​பேட்டை கிள்ளை இணைப்​புப்​பா​லம் ரூ.​ 9 கோடி​யில் கட்​டப்​பட்டு வரு​கி​றது.​ 108 ஆம்​பு​லன்ஸ் வாக​னம் 40 ஆயி​ரம் பிர​ச​வங்​க​ளுக்கு உதவி இருக்​கி​றது.​ கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் 15 ஆயி​ரம் பேருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​ட​தில் ரூ.​ 52 கோடி செல​வி​டப்​பட்டு உள்​ளது.​   1.27 கோடி குடும்​பங்​க​ளுக்கு அடை​யாள அட்டை வழங்​கப்​பட்டு இருக்​கி​றது.​

          அ ​ரசு மருத்​து​வ​ம​னை​க​ளுக்கு ரூ.​ 110 கோடி​யில் உயிர்​காக்​கும் மருத்​து​வக் கரு​வி​கள் வழங்​கப்​ப​டு​கி​றது என்​றார் அமைச்​சர் பன்​னீர்​செல்​வம்.​ ​

             வி​ழாக்​க​ளுக்கு மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன் தலைமை வகித்​தார்.​ எம்​எல்ஏ சபா.ராஜேந்​தி​ரன்,​​ ஊராட்சி மன்​றத் தலை​வர்​கள் விஜ​ய​ரா​க​வன்,​​ சாமிக்ண்ணு,​​ கட​லூர் வட்​டாட்​சி​யர் தட்​சி​ணா​மூர்த்தி ​ உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior