உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

போராட்ட அறி​விப்பு

                   கட​லூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப்​பாதை அமைக்​கக் கோரி விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் ரயில் மறி​யல் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.​

                    வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மா​றன் சனிக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ விழுப்​பு​ரம்-​மயி​லா​டு​துறை இடையே அகல ரயில்​பா​தைத் திட்​டம் நிறை​வ​டை​யும் நிலை​யில் உள்​ளது.​ இப்​ப​ணி​கள் முடிவு அடைந்​த​தும்,​​ கட​லூர் லாரன்ஸ் சாலை​யில் உள்ள ரயில்வே கேட்டை நிரந்​த​ர​மாக மூடி,​​ சுவர் வைக்​கப் போவ​தாக ரயில்வே இலாகா அறி​வித்து உள்​ளது.​ ஆனால்,​​ இந்த இடத்​தில் சுரங்​கப்​பாதை அமைக்க வேண்​டும் என்​பது கட​லூர் மக்​க​ளின் நீண்​ட​கால கோரிக்கை.​ ​

                  ர​யில்வே மேம்​பா​லம் கட்​டும்​போதே சுரங்​கப் பாதைக்​கும் நிதி ஒதுக்​கப்​பட்டு,​​ பணி நடை​பெ​ற​வில்லை.​ தற்​போது சுரங்​கப்​பாதை திட்​டம் அனு​ம​திக்​கப்​பட்​டும் பணி​கள் தொடங்​கப்​ப​டாத அவ​ல​நிலை நீடிக்​கி​றது.​ ​

                  சு​ரங்​கப்​பாதை கோரி கட​லூர் பொது​நல அமைப்​பு​கள் 16-ம் தேதி முதல் கால​வ​ரை​யற்ற உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் அறி​வித்து உள்​ளன.​ எனவே ரயில்வே சுரங்​கப்​பா​தைத் திட்​டத்தை விரைந்து நிறை​வேற்ற வலி​யு​றுத்தி விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் விரை​வில் ரயில் மறி​யல் போராட்​டம் நடத்​தப்​ப​டும் என்று செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior