உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

பிள்​ளை​யார்​குப்​பத்​தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பண்ருட்டி,​ டிச. 5:​ 

                        பண்​ருட்டி வட்​டம் நடுப்​பிள்​ளை​யார்​குப்​பம் கிரா​மத்​தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா சனிக்​கி​ழமை நடை​பெற்​றது. ​ 

                    பண்​ருட்டி வட்​டம் மாளி​கம்​பட்டு ஊராட்​சி​யில் உள்ள நடுப்​பிள்​ளை​யார்​குப்​பம்,​ புது​பிள்​ளா​யார்​குப்​பம்,​ பழைய பிள்​ளை​யார்​குப்​பம் ஆகிய கிரா​மங்​க​ளில் 700க்கும் மேற்​பட்ட குடும்​பத்​தி​னர் வசித்து வரு​கின்​ற​னர். இப்​ப​கு​தி​யில் வசிப்​ப​வர்​கள் ரேஷன் பொருள்​கள் வாங்க 2 கீ.மி. தொலை​வில் உள்ள மாளி​கம்​பட்டு கிரா​மத்​துக்கு சென்று வந்​த​னர். இ​த​னால் தங்​கள் பகு​தி​யில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்​துத் ​ தர வேண்​டும் என கிராம மக்​கள் கோரிக்கை வைத்​தி​ருந்​த​னர். இக்​கோ​ரிக்​கையை ஏற்று நடுப்​பிள்​ளை​யார் குப்​பத்​தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்​கப்​பட்​டது. 

                இ​தன் தொடக்க விழா ஊராட்சி மன்​றத் தலை​வர் கே.வர​த​ரா​ஜன் தலை​மை​யில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது. இதில் கூட்​டு​றவு சங்க சார் பதி​வா​ளர் எஸ்.ராக​வன் கலந்​துக்​கொண்டு முதல் விற்​ப​னை​யைத் தொடங்கி வைத்​தார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior