உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

பாதி​யில் விடப்​பட்ட பள்ளி வகுப்பறை கட்​டு​மா​னப் பணி

​ பண்​ருட்டி,​ டிச. 5:​ 

                              மாளி​கம்​பட்டு கிரா​மத்​தில் 5 ஆண்​டு​க​ளுக்கு முன் கட்​டப்​பட்டு பாதி​யில் நிற்​கும் கூடு​தல் பள்ளி வகுப்​பறை கட்​டு​மா​னப் பணியை விரைந்து முடித்​துத் தர வேண்​டும். இல்​லை​யேல் மக்​க​ளைத் திரட்டி போராட்​டம் செய்​யப்​ப​டும் என்று ஒன்​றிய கவுன்​சி​லர் எழி​ல​ர​சன் கூறி​னார்.

                           பண்​ருட்டி வட்​டம் மாளி​கம்​பட்டு கிரா​மத்​தில் ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்ளி இயங்கி வரு​கி​றது. தாழம்​பட்டு,​ மாளி​கம்​பட்டு,​ பிள்​ளை​யார்​குப்​பம் பகு​தி​களை சேர்ந்த 450க்கும் மேற்​பட்ட மாணவ,​ மாண​வி​கள் இப்​பள்​ளி​யில் படித்து வரு​கின்​ற​னர்.

                அ​னை​வ​ருக்​கும் கல்வி திட்​டத்​தின் மூலம் இப்​பள்​ளிக்​காக 5 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் ​ ரூ.4.60 லட்​சம் செல​வில் 3 வகுப்​ப​றை​கள் கட்​டும்​பணி தொடங்​கி​யது. 75 சத​வீ​தம் முடி​வ​டைந்த நிலை​யில் இக்​கட்​ட​டப் பணியை அப்​ப​டியே விட்​டு​விட்​ட​னர். இத​னால் இக்​கட்​ட​டம் தற்​போது சித​லம் அடைந்து வரு​கின்​றது.÷இது குறித்து மாளி​கம்​பட்டு ஊராட்சி ஒன்​றிய கவுன்​சி​லர் எழி​ல​ர​சன் கூறி​யது:​ மாளி​கம்​பட்டு கிரா​மத்​தில் 50 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இப்​பள்ளி இயங்கி வரு​கி​றது. இக்​கட்​டி​டத்​தின் மேல் ஓடு​கள் பதிக்​கப்​ப​ட​வில்லை,​ பூச்சு வேலை மற்​றும் தரை போடப்​ப​டா​மல் உள்​ளது. இடப்​பற்​றாக்​கு​றை​யால் இந்த கட்​ட​டத்​தில் தான் மாண​வர்​கள் அமர்ந்து படித்து வரு​கின்​ற​னர். கடந்த 5 ஆண்​டு​க​ளாக பூர்த்தி செய்​யப்​ப​டா​மல் உள்ள இக்​கட்​ட​டம் சித​லம் அடைந்து வரு​கின்​றது.÷இது குறித்து பண்​ருட்டி ஒன்​றிய அலு​வ​ல​கத்​தில் கேட்​ட​தற்கு,​ "கட்​ட​டம் ஒன்​றி​யத்​தி​டம் ஒப்​ப​டைக்​கப்​ப​ட​வில்லை'  என கூறி​விட்​ட​னர். இக்​கட்​ட​டப் பணியை பூர்த்தி செய்து மாண​வர்​கள் பாது​காப்​பான சூழ​லில் கல்வி பயில மாவட்ட நிர்​வா​க​மும்,​ சம்​மந்​தப்​பட்ட அதி​கா​ரி​க​ளும் முன்​வர வேண்​டும். இல்லை என்​றால் கிராம மக்​களை ஒன்று திரட்டி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​ப​டும் என்று ஒன்​றி​யக் கவுன்​சி​லர் எழி​ல​ர​சன் கூறி​னார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior