உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

14 வய​துக்கு உள்​பட்​டோருக்கு கட்​டாய இல​வ​சக் கல்​வி

  14 வய​துக்கு உள்​பட்ட அனைத்து குழந்​தை​க​ளுக்​கும் இல​வச கட்​டா​யக் கல்வி வழங்க வகை​செய்​யும் சட்​டத்​தைத் தமி​ழக அரசு இயற்ற வேண்​டும் என்று கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்த குழந்​தை​கள் உரி​மைச் சட்​டக் கருத்​த​ரங்​கில் அர​சுக்கு பரிந்​துரை செய்​யும் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது. ​÷கு​ழந்​தை​கள் உரிமை மற்​றும் வளர்ச்​சிக்​கான மையம்,​ தோழமை,​ இந்​திய நுகர்​வோர் அமைப்​பு​க​ளின் கூட்​ட​மைப்பு சார்​பில் குழந்​தை​க​ளுக்​கான உரிமை பற்​றிய கருத்​த​ரங்​கம் நடந்​தது. குழந்​தை​கள் உரி​மைச் சட்​டம் -​2000 மற்​றும் தமி​ழ​கச் சட்​டங்​கள் குறித்து கருத்​த​ரங்​கில் விவா​திக்​கப்​பட்​டது.

                14 வய​துக்கு உள்​பட்ட அனைத்து குழந்​தை​க​ளக்​கும் கட்​டாய இல​வ​சக் கல்வி வழங்க வகை​செய்​யும் சட்​டத்​தைத் தமி​ழக அரசு இயற்ற வேண்​டும். குழந்​தை​க​ளுக்​கான நீதி​மன்​றங்​க​ளுக்​குத் தனி​யாக நீதி​ப​தி​களை நிய​மிக்க வேண்​டும். அவர்​க​ளுக்கு குழந்​தை​கள் உரிமை பற்றி பயிற்சி அளிக்க வேண்​டும். அனைத்து மாவட்​டங்​க​ளி​லும் குழந்​தை​க​ளுக்​கான போலீஸ் யூனிட்​டு​களை உரு​வாக்க வேண்​டும் ​ உள்​ளிட்ட 12 தீர்​மா​னங்​கள் அர​சுக்​குப் பரிந்​து​ரைக்​கப்​பட்​டன. 18 வய​துக்கு உள்​பட்​ட​வர்​கள் குழந்​தை​கள் என்று இருப்​பதை 16 வய​துக்கு உள்​பட்​ட​வர்​கள் குழந்​தை​கள் என்று சட்​டத்​தில் திருத்​தம் கொண்​டு​வர வேண்​டும் என்​றும் கருத்​த​ரங்​கில் கோரப்​பட்​டது.

                 க​ருத்​த​ரங்​கில் குழந்​தை​கள் உரிமை வாரிய உறுப்​பி​னர் சமூக சேவகி சுஜாதா சீனி​வா​சன்,​ குழந்​தை​கள் உரிமை மற்​றும் வளர்ச்சி மைய இயக்​கு​நர் தாமஸ் ஜெய​ராஜ்,​ துணை இயக்​கு​நர் தேன்​பாண்​டி​யன்,​ இந்​திய நுகர்​வோர் கூட்​ட​மைப்​பின் அறங்​கா​வ​லர் வழக்​க​றி​ஞர் மார்ட்​டின்,​ உயர் நீதி​மன்ற வழக்​க​றி​ஞர் திவா​க​ரன்,​ தோழமை அமைப்​பின் இயக்​கு​நர் தேவ​நே​யன் உள்​ளிட்​டோர் பேசி​னர். இந்​திய நுகர்​வோர் கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் எம்.நிஜா​மு​தீன் வர​வேற்​றார். செல்​வம் நன்றி கூறி​னார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior