உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

குழந்​தை​கள் தின விழா

              நெய்வேலி வட்​டம் 29-ல் உள்ள தாகூர் மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்​ளி​யில் குழந்​தை​கள் தின​விழா அண்​மை​யில் கொண்​டா​டப்​பட்​டது.​     

              வி​ழா​வுக்கு தாகூர் கல்​விக் குழும நிர்​வாக இயக்​கு​நர் ரபீந்​தி​ர​நாத் தலைமை வகித்​தார்.​ சிறப்பு விருந்​தி​ன​ரா​கக் கலந்​து​கொண்ட நெய்வேலி டிஎஸ்பி என்.மணி,​​ தேசிய அள​வி​லான போட்​டி​க​ளில் பங்​கேற்று வெள்​ளிப்​ப​தக்​கம் வென்ற மாண​வன் ராமச்​சந்​தி​ரனை கெüர​வித்து பரி​சு​களை வழங்​கி​னார்.​மு​தன்மை விருந்​தி​ன​ரா​கக் கலந்து கொண்ட தொழி​ல​தி​பர் எல்.சீனு​வா​சன் 10,​ 12-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் அதிக மதிப்​பெண் பெற்ற மாண​வர்​க​ளுக்கு ஊக்​கப் பரி​சு​கள் வழங்​கப்​ப​டும் என அறி​வித்​தார்.​       

          மனித நேய வளர்ச்சி மைய பொதுச் செய​லர் ஜீவா முரு​கே​சன் வாழ்த்​துரை வழங்​கி​னார்.​  தொ​டர்ந்து மாணவ,​​ மாண​வி​ய​ரின் கலை நிகழ்ச்​சி​கள் நடை​பெற்​றன.​ முன்​ன​தாக பள்​ளி​யின் துணை முதல்​வர் உமா வர​வேற்​றார்.​        

       நட​ராஜ சோழன் தொகுத்து வழங்​கி​னார்.​ நிகழ்ச்​சிக்​கான ஏற்​பா​டு​களை பள்ளி முதல்​வர் சந்​தி​ர​சே​க​ரன் செய்​தி​ருந்​தார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior