உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

வெள்ளை ​ அறிக்கை வெளி​யிட வேண்டும்

கடலூர்,​​ ​ டிச.​ 8: ​ ​ 

                     கட​லூர் ரயில்வே சுரங்​கப்​பா​தைத் திட்​டம் கால​தா​ம​த​மா​வது குறித்து வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்​டும் என்று விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி மற்​றும் பொது​நல அமைப்​பு​கள் திங்​கள்​கி​ழமை கோரிக்கை விடுத்​தன.​ ​ ​

                          வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்​டச் செய​லர் சு.திரு​மா​றன் தலை​மை​யில் கட​லூர் பொது​நல அமைப்​பு​க​ளின் கூட்​ட​மைப்​பைச் சேர்ந்த நிர்​வா​கி​கள் திங்​கள்​கி​ழமை மாவட்ட ஆட்​சி​ய​ரைச் சந்​தித்து அளித்த கோரிக்கை மனு:​

                             ம ​யி​லா​டு​துறை -​ விழுப்​பு​ரம் அகல ரயில்​பா​தைத் திட்​டம் முடி​வ​டை​யும் நிலை​யில் உள்​ளது.​ ஆனால் இந்த மார்க்​கத்​தில் உள்ள திருப்​பாப்பு​லி​யூர் லாரன்ஸ் சாலை சுரங்​கப்​பாதை திட்​டம் இன்​ன​மும் நிறை​வேற்​றப்​ப​டா​மல் உள்​ளது.​

                           இந்த மார்க்​கத்​தில் ரயில்​கள் ஓடத் தொடங்​கி​னால்,​​ லாரன்ஸ் சாலை​யில் சுவர் வைத்​துத் தடுக்க ரயில்வே ஏற்​கெ​னவே முடிவு செய்து இருக்​கி​றது.​

                           சு​ய​நல சக்​தி​க​ளுக்​கு துணை போகும் சில அதி​கா​ரி​க​ளின் மெத்​த​னப் போக்கே,​​ சுரங்​கப்​பாதை திட்​டம் கால​தா​ம​தம் ஆவ​தற்​குக் கார​ணம் என்று அறி​கி​றோம்.​ என​வே​தான் சுரங்​கப்​பாதை திட்​டத்தை அமல்​ப​டுத்த பொது​நல இயக்​கங்​கள் 16-ம் தேதி முதல் நடத்த திட்​ட​மிóட்டு இருக்​கும் கால​வ​ரை​யற்ற உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்​துக்கு விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி ஆத​ரவு அளித்து இருக்​கி​றது.​

                        வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் ரயில் மறி​யல் போராட்​டம் நடத்த முடிவு செய்து இருக்​கி​றோம்.​

             இந்த நிலை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நெல்​லிக்​குப்​பம் வந்த ரயில்வே கோட்ட மேலா​ளர்,​சுரங்​கப்​பாதை அமைக்க ரயில்வே தயா​ராக இருப்​ப​தா​க​வும்,​​ மாநில நெடுஞ்​சா​லைத் துறை​யி​டம் இருந்து ஒப்​பு​தல் வர​வில்லை என்​றும் கூறி​யுள்​ளார்.​

              எ​னவே இத்​திட்​டத்தை முறி​ய​டிக்க முய​லும் சுய​நல சக்​தி​க​ளுக்கு மாவட்ட நிர்​வா​கம் மறை​மு​க​மா​கத் துணை நிற்​கி​றதோ என்ற சந்​தே​கம் எழுந்​துள்​ளது.​ ​ ​​ வெளிப்​ப​டை​யான நிர்​வா​கம் இருப்​பதை உத்​த​ர​வா​தம் செய்​யும் வகை​யில்,​​ இப்​பி​ரச்​னை​யில் வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்​டும் என்​றும் மனு​வில் கோரப்​பட்​டுள்​ளது.​

                 த​மிழ் தேசிய விடு​த​லைப் பேரவை மாநி​லத் துணைச் செய​லர் திரு​மார்​பன்,​​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் வழக்​க​றி​ஞ​ரணி மாவட்ட்ச செய​லர் காத்​த​வ​ரா​யன்,​​ ஓவி​யர் அணி மாநி​லச் செய​லர் ஜெய​ரா​மன் உள்​ளிட்​டோர் உடன் சென்று இருந்​த​னர்.​ ​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior