உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

சிதம்பரம் செய்திகள்




சிதம் ​ப​ரம்,​​ டிச.7: ​ 
  
கொடி​நாள் நிதி சேக​ரிப்பு
 

சிதம்​ப​ரத்​தில் ஊர்க்​கா​வல்​படை சார்​பில் கொடி​நாள் நிதி சேக​ரிப்பு தொடக்க விழா கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​÷நி​கழ்ச்​சியை கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கம் ​ தொடங்கி வைத்​தார்.​ கட​லூர் மாவட்ட தள​பதி ஆர்.கேதார்​நா​தன் முதல் நிதியை அளித்​தார்.​÷இந்​நி​கழ்ச்​சி​யில் கோட்​டத் தள​பதி ஆர்.கோவிந்​த​ரா​ஜன்,​​ படைத் தள​பதி எஸ்.அந்​தோ​ணி​சாமி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர். 

தலைமை ஆசி​ரி​யர்​க​ளுக்​கான கருத்​த​ரங்கு       

                      கட​லூர் கல்வி மாவட்ட பாரத சாரண,​​ சார​ணி​யர் இயக்​கம் சார்​பில் சிதம்​ப​ரம் ஹோட்​டல் சார​தா​ராம் தர்​பார் ஹாலில் தலைமை ஆசி​ரி​யர்​க​ளுக்கு சார​ணி​யம் குறித்த ஒரு நாள் கருத்​த​ரங்கு அண்​மை​யில் நடை​பெற்​றது.​÷இக் கருத்​த​ரங்​கில் 125 தலைமை ஆசி​ரி​யர்​கள் பங்​கேற்​ற​னர்.​ மாவட்​டத் தலை​வர் சி.எஸ்.ராம​சாமி தலைமை வகித்​தார்.​ சார​ணிய ஆணை​யர் கா.காவேரி முன்​னிலை வகித்​தார்.​ ப​யிற்சி ஆணை​யர் துரை.ராம​லிங்​கம் வர​வேற்​றார்.​ மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் செ.அமு​த​வள்ளி கருத்​த​ரங்கை தொடக்கி வைத்​துப் பேசு​கை​யில் அனைத்து பள்​ளி​க​ளி​லும் சாரண இயக்​கம் சிறப்​பாக நடை​பெற தலைமை ஆசி​ரி​யர் செயல்​பட வேண்​டும் எனக் கூறி​னார்.​ 
  
குழும வளர்ச்​சி திட்ட கூட்​டம் 

செப்பு, ​​ கவ​ரிங் நகை தொகுப்பு நிறு​வ​னங்​க​ளின் குழும வளர்ச்சி திட்​டம் குறித்த முதன்​மைக் கூட்​டம் சிதம்​ப​ரம் காமாட்​சி​யம்​மன் கோயில் வளா​கத்​தில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​÷த​மிழ்​நாடு விஸ்​வ​கர்ம முன்​னேற்​றச் சங்​கம் மற்​றும் தமிழ்​நாடு ஐந்​தொ​ழி​லா​ளர்​கள் முன்​னேற்ற தொழிற்​சங்​கம் ஆகி​யவை இக்​கூட்​டத்தை ஏற்​பாடு செய்​தி​ருந்​தது.​

                              சங்க மாநி​லத் தலை​வர் ஜி.சேகர் தலைமை வகித்​தார்.​ தொழிற்​சங்க மாநில செய​லர் ஆர்.ராமச்​சந்​தி​ரன் வர​வேற்​றார்.​ க ​ட​லூர் மாவட்ட தொழில் மைய முது​நிலை மேலா​ளர் ராஜ​க​ணேஷ்,​​ இந்​தி​யன் வங்கி முது​நிலை மேலா​ளர் என்.கபி​லன்,​​ விலை மதிப்பு மேலாண்மை ஆலோ​ச​கர் சென்னை ஆர்.வாசு​தே​வன் உள்​ளிட்​டோர் விளக்​க​வு​ரை​யாற்​றி​னர்.​

                   சி ​தம்​ப​ரத்​தில் செப்பு,​​ கவ​ரிங் நகை தொழில் முனை​வோர்​கள் வாழ்க்கை தரம் உய​ரும் வகை​யில் மத்​திய,​​ மாநில அர​சு​கள் மூலம் அத்​தொ​ழில் சார்ந்த முனை​வோர்​களை ஒருங்​கி​ணைத்து செப்பு,​​ கவ​ரிங் நகை தொகுப்பு நிறு​வ​னங்​க​ளின் குழு​மம் ஒன்றை உரு​வாக்​கு​வது என கூட்​டத்​தில் தீர்​மா​னிக்​கப்​பட்​டது.​ ந​க​ரச் செய​லர் பி.முத்​துக்​கு​மார்,​​ பொரு​ளா​ளர் எஸ்.ராஜ்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​ மாநில இளை​ஞ​ரணி செய​லர் எஸ்.ரமேஷ் நன்றி கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior