உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

விருத்​தா​ச​லத்​தில் மக்​காச்​சோள விளை​பொ​ருள் குழுக் கூட்​டம்

நெய்வேலி, ​ டிச. 5:​ 

                            விருத்​தா​ச​லம் வட்​டம் மங்​க​ளூர் ஒன்​றி​யத்​துக்கு உட்​பட்ட ஜா.ஏந்​தல் கிரா​மத்​தில் வேளாண் விற்​பனை மற்​றும் வணி​கத்​துறை சார்​பில் விருத்​தா​ச​லம் கோட்ட வேளாண் விளை​பொ​ருள் கூட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.

                       இ​து​கு​றித்து விருத்​தா​ச​லம் கோட்ட வேளாண் அலு​வ​லர் ச.அமுதா வெள்​ளிக்​கி​ழமை வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ ஜா.ஏந்​தல் கிரா​மத்​தில் நீர்​வள,​ நில​வள திட்​டத்​தின் கீழ் 15 உறுப்​பி​னர்​க​ளைக் கொண்ட விளை​பொ​ருள் குழுக்​கள் எள்,​ மணிலா,​ பருத்தி மற்​றும் மக்​காச்​சோள பயிர்​க​ச​ளுக்​காக அமைக்​கப்​பட்​டுள்​ளன.

                 இக் ​கு​ழுக்​க​ளுக்கு வேளாண் வணி​கத் திட்​டங்​கள்,​ மேற்​கண்ட பயிர்​க​ளுக்​கான அறு​வடை பின்​செய் நேர்த்தி தொழில்​நுட்​பங்​கள்,​ லாபம் தரும் சந்தை வாய்ப்​பு​கள்,​ விளை பொருள்​களை ஒழுங்​கு​முறை விற்​பனை கூடங்​க​ளுக்கு கொண்டு சென்று விற்​பனை செய்​வது ஆகி​யவை குறித்து பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

              மே​லும் விளை பொருள்​க​ளின் அறு​வ​டைக் காலங்​க​ளில் எதிர்​நோக்​கும் விற்​பனை விலை குறைவை ஈடு​கட்ட ஒழுங்கு முறை விற்​ப​னைக் கூடங்​க​ளில் இருப்பு வைத்து விற்​பனை செய்​வது,​ விற்​ப​னைக் காலங்​க​ளில் பொரு​ளீட்டு கடன்​பெ​றும் வழி வகை​கள்,​ மக்​காச்​சோ​ளம் விற்​பனை செய்​வ​தற்கு வேளாண் விற்​ப​னைத் துறை சார்​பில் தனி​யார் கோழித் தீவன பண்​ணை​கள் மூலம் புரிந்​து​ணர்வு ஒப்​பந்​தம் செய்து கொள்​மு​தல் செய்​யும் ஏற்​பா​டு​கள் குறித்​தும் அமுதா விளக்​கி​னார்.

                 முன்​ன​தாக விவ​சாய முன்​னோடி விளை​பொ​ருள் குழுக் கூட்​டத்​துக்கு வேம்​பன் தலைமை வகித்​தார். உதவி வேளாண் அலு​வ​லர் ஜெய​பால் கூட்​டத்​துக்​கான ஏற்​பா​டு​க​ளைச் செய்​தி​ருந்​தார். 40-க்கும் மேற்​பட்ட விவ​சா​யி​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior