உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

பாபர் மசூதி இடிப்பு தினம்: ​ போலீஸ் தீவிர சோதனை

கட ​லூர்,​ டிச. 5:​ 

                            டிசம்​பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்​னிட்டு கட​லூர் மாவட்​டத்​தில் போலீஸ் சோதனை தீவி​ர​மாக நடை​பெற்​றன. இதில் பிடி​வா​ரண்ட் நிலு​வை​யில் இருந்​த​வர்​கள் உள்​ளிட்ட 110 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர். ​ ​

                      மா​வட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஸ் உத்​த​ர​வின்​பே​ரில் வெள்​ளிக்​கி​ழமை இரவு இந்த மாவட்த்​தில் உள்ள 21 சோத​னைச் சாடி​க​ளி​லும் வாக​னத் தணிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. விடு​தி​கள்,​ பஸ் நிலை​யங்​கள்,​ ரயில் நிலை​யங்​கள்,​ மக்​கள் அதி​கம் கூடும் இடங்​க​ளில் சோதனை நடத்​தப்​பட்​டது. 600க்கும் மேற்​பட்ட போலீ​ஸôர் இந்த சோத​னை​யில் ஈடு​பட்​ட​னர். ​ பிடி​வா​ரண்ட் நிலு​வை​யில்  இருந்த குற்​ற​வா​ளி​கள் 15 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர். திருட்டு வழக்​கு​க​ளில் தேடப்​பட்ட 4 பேர்,​ சாராய வழக்​கு​க​ளில் தேடப்​பட்ட 21 பேர்,​ மேலும் சந்​தே​கப்​ப​டும் நிலை​யில் சுற்​றித்​தி​ரிந்த 70 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர். ​

           கு​டி​போ​தை​யில் வாக​னங்​களை ஓட்​டிய 41 பேர்,​ அதி​வே​க​மாக வாக​னங்​களை ஓட்​டிய 9 பேர் மீதும் போதிய அவ​ணங்​கள் இன்றி வாக​னங்​களை ஓட்​டிய 200 பேர் மீதும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. ​

               மா​வட்​டத்​தில் உள்ள சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயில்,​ விருத்​தா​ச​லம் விருத்​த​கீ​ரீஸ்​வர் கோயில்,​ திரு​வந்​தி​பு​ரம் தேவ​நா​த​சாமி கோயில்,​ திருப்​பாப்பு​லி​யூர் பாட​லீஸ்​வ​ரர் கோயில் உள்​ளிட்ட பிர​ப​ல​மான கோயில்​கள்,​ மசூ​தி​கள்,​ கிறிஸ்​தவ தேவா​ல​யங்​க​ளுக்​கும் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்டு உள்​ளது. தலை​வர்​க​ளின் சிலை​க​ளுக்​கும் பாது​காப்பு போடப்​பட்டு உள்​ளது.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior