உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

விலை உயர்வை கண்டித்து மறியல்

கட ​லூர்,​​ டிச.7: ​ 

                             கட​லூர் மாவட்​டத்​தில் 9 ​ இடங்​க​ளில் இந்​தி​யக் கம்​யூ​னிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள் திங்​கள்​கி​ழமை இணைந்து நடத்​திய மறி​யல் போராட்​டத்​தில் 1,700 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர்.​ ​

                    வி​லை​வாசி உயர்​வைக் கட்​டுப்​ப​டுத்த வேண்​டும்,​​ முன்​பேர வர்த்​த​கத்​தைத் தடை செய்ய வேண​டும்,​​ பொது விநி​யோ​கத் திட்​டத்​தைப் பலப்​ப​டுத்த வேண்​டும்,​​ சமை​யல் கேஸ் தட்​டுப்​பாட்டை போக்க வேண்​டும் என்ற கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி இரு கம்​யூ​னிஸ்ட் கட்​சி​க​ளும் இணைந்து கட​லூர் மாவட்​டத்​தில் மறி​யல் போராட்​டம் நடத்​தின.​ ​

                க​ட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் உழ​வர் சந்தை அருகே மறி​யல் போராட்​டம் நடந்​தது.​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் நக​ரச் செய​லர் சுப்​பு​ரா​யன்,​​ இந்​தி​யக் கம்​யூ​னிஸ்ட் வட்​டச் செய​லர் சம்​பந்​தம் ஆகி​யோர் தலைமை வகித்​த​னர்.​ ​

             மார்க் ​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் மாநில செயற்​குழு உறுப்​பி​னர் பி.செல்​வ​சிங்,​​ மாநி​லக்​குழு உறுப்​பி​னர் செ.தன​சே​க​ரன்,​​ ஒன்​றி​யச் செய​லர் மாத​வன்,​​ சிப்​காட் செய​லர் ஆள​வந்​தார்,​​ இந்​தி​யக் கம்​யூ​னிஸ்ட் மாவட்​டச் செய​லர் டி.மணி​வா​ச​கம்,​​ மாவட்​டக்​குழு உறுப்​பி​னர் எஸ்.கே.விஸ்​வ​நா​தன்,​​ வட்​டத் துணைச் செய​லர் இ.பால​கி​ருஷ்​ணன்,​​ நக​ரச் செய​லர் வி.குளோப்,​​ வட்​டக் குழு உறுப்​பி​னர் ஜி.வீரப்​பன்,​​ கட​லூர் நக​ரத் தலை​வர் என்.ராமு உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​ ​

 ம ​றிய​லில் ஈடு​பட்ட 243 பேர் போலீ​ஸô​ரால் கைது செய்​யப்​பட்​ட​னர்.​ ​ கட​லூர் மாவட்​டத்​தில் சிதம்​ப​ரம்,​​ பண்​ருட்டி,​​ நெய்வேலி,​​ ​ விருத்​தா​ச​லம்,​​ திட்​டக்​குடி,​​ பெண்​ணா​டம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​யில்,​​ குறிஞ்​சிப்​பாடி,​​ ஆகிய ஊர்​க​ளி​லும் மறி​யல் போராட்​டங்​கள் நடந்​தன.​ மாவட்​டத்​தில் 1700 பேர் கைது செய்​யப்​பட்​ட​தாக,​​ போலீ​ஸôர் தெரி​வித்​த​னர். 

சிதம்​ப​ரத்​தில் ...​​​ 

                                    சிதம்​ப​ரம்,​​ டிச.​ 7:​ அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை​வாசி உயர்வை கட்​டுப்​ப​டுத்தி வலி​யு​றுத்தி மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி,​​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி இணைந்து சிதம்​ப​ரத்​தில் சாலை மறி​யல் போராட்​டத்தை திங்​கள்​கி​ழமை நடத்​தி​யது.​÷காந்தி சிலையி​லி​ருந்து ஊர்​வ​ல​மாக புறப்​பட்டு தெற்கு ரத வீதி இந்​தி​யன் வங்கி முன் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ நக​ரச் செய​லர்​கள் ஆர்.ராமச்​சந்​தி​ரன்,​​ எஸ்.காசி​லிங்​கம் ஆகி​யோர் தலைமை வகித்​த​னர்.​÷மா ​வட்ட செயற்​குழு உறுப்​பி​னர் வி.எம்.சேகர்,​​ மாவட்​டச் செய​லர் டி.ஆறு​மு​கம்,​​ நகர்​மன்​றத் தலை​வர் ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம்,​​ மாவட்​டக்​குழு உறுப்​பி​னர் வி.நட​ரா​ஜன் மற்​றும் 68 பெண்​கள் உள்​ளிட்ட 321 பேரை நகர போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ மாலை​யில் விடு​விக்​கப்பட்டனர்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

நெய்​வே​லி​யில்...​

                  நெய்வேலி, ​​ ​ டிச.​ 7: ​ விலை​வாசி உயர்​வைக் கண்​டித்து மந்​தா​ரக்​குப்​பம் பி.எஸ்.என்.எல்.​ அலு​வ​ல​கம் எதிரே மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி சார்​பில் மறி​யல் போராட்​டம் நடை​பெற்​றது.​ இதில் பங்​கேற்ற 102 பேர் கைதா​கி​னர்.​÷அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை உயர்​வைக் கண்டு கொள்​ளாத மத்​திய,​​ மாநில அர​சின் போக்​கைக் கண்​டித்து நெய்வேலி நகர மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி சார்​பில் மந்​தா​ரக்​குப்​பம் பி.எஸ்.என்.எல்.​ அலு​வ​ல​கம் எதிரே நெய்வேலி நகர மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி நக​ரச் செய​லர் திரு​அ​ரசு தலை​மை​யில் மறி​யல் போராட்​டம் நடை​பெற்​றது.​ இ​தில் சிஐ​டியு தொழிற்​சங்க மாவட்​டச் செயற்​குழு உறுப்​பி​னர் முத்​து​வேல்,​​ இணைச் செய​லர் சங்கி​லிப்​பாண்​டி​யன்,​நெய்வேலி சிஐ​டியு தலை​வர் குப்​பு​சாமி உள்​பட பலர் பங்​கேற்​ற​னர்.​ம​றி​யல் போராட்​டத்​தில் பங்​கேற்ற 102 பேரை மந்​தா​ரக்​குப்​பம போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ மாலை​யில் அவர்​கள் விடு​விக்​கப்​பட்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior