உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

நடு​நி​லைப் பள்ளி முற்​றுகை

​ கட​லூர்,​​ டிச.8: ​ 

                  கூடு​தல் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்க வலி​யு​றுத்தி செவ்​வாய்க்​கி​ழமை ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்​ளி​யைப் பெற்​றோர் முற்​று​கை​யிட்​ட​னர்.​ ​÷கு​ம​ராட்சி ஊராட்சி ஒன்​றி​யம் பூலா​மேடு கிரா​மத்​தில் ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்ளி உள்​ளது.​ இங்கு 134 மாண​வர்​கள் படிக்​கி​றார்​கள்.​ 2 ஆசி​ரி​யர்​கள் மட்​டுமே நிய​மிக்​கப்​பட்டு உள்​ள​னர்.​

                கூ​டு​தல் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்க வேண்​டும் என்று பல​முறை கோரிக்கை விடுத்​தும் நிய​மிக்​கப்​பட வில்லை.​ ​

                 எ ​னவே செவ்​வாய்க்​கி​ழமை பெற்​றோர் தங்​கள் பிள்​ளை​களை பள்​ளிக்கு அனுப்ப மறுத்​து​விட்​ட​னர்.​ மேலும் பெற்​றோர் மற்​றும் ஊர் பொது​மக்​கள் பள்​ளிக்​குழு உறுப்​பி​னர் வடி​வேல் தலை​மை​யில் பள்​ளியை இழுத்து மூட முயன்​ற​னர்.​ 

           போ​லீ​ஸô​ருக்​குத் தக​வல் கிடைத்து அவர்​கள் வந்​து​வி​டவே,​​ பள்​ளியை மூடும் முயற்சி கைவி​டப்​பட்​டது.​         

                      எனி​னும் பள்​ளியை முற்​று​கை​யிட்டு தங்​கள் கோரிக்​கை​கயை வலி​யு​றுத்​தி​னர்.​ மாண​வர்​க​ளைப் பள்​ளிக்கு அனுப்ப மறுத்து விட்​ட​னர்.​ ​அ​வர்​க​ளு​டன் சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் தன​வந்​த​கி​ருஷ்​ணன் மற்​றும் போலீ​ஸôர் பேச்சு வார்த்தை நடத்​தி​னர்.​ விரை​வில் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்க ஏற்​பாடு செய்​வ​தாக உறுதி அளித்​த​தைத் தொடர்ந்து பொது​மக்​க​ளின் முற்​று​கைப் போராட்​டம் கைவி​டப்​பட்​டது.​ ஊராட்சி மன்​றத் தலை​வர் குண​சே​க​ரன் உள்​ளிட்​டோர் பேச்​சு​வார்த்​தை​யில் கலந்து கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior