உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

பண்​ருட்​டி​யில் மணிலா விதைப்பு மும்​மு​ரம்

​ பண்​ருட்டி,​ டிச. 5:​ 
 
                              பண்​ருட்டி பகு​தி​யில் மணிலா விதைப்​புப் பணி தீவி​ரம் அடைந்​துள்​ளது. ஆள்​கள் பற்​றாக் குறை​யால் இப்​பணி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.
 
                        க​ட​லூர் மாவட்​டத்​தில் விவ​சாய விளை பொருள்​க​ளில் நெல்,​ கரும்​புக்கு அடுத்​தப்​ப​டி​யாக எண்ணை வித்​தான மணிலா அதிக அளவு நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​ப​டு​கி​றது. ​ கார்த்​திகை,​ மார்​கழி மாதங்​க​ளில் மணிலா விதைப்பு செய்​யப்​ப​டும். இருப்​பி​னும் மழை​யால் சேதம் ஏற்​ப​டும் என்ற அச்​சத்​தால் அநேக விவ​சா​யி​கள் கார்த்​திகை தீபம் முடி​வ​டைந்​த​தும் விதைப்​புப் பணி​களை தீவி​ரப்​ப​டுத்​து​வர். தற்​போது கார்த்​திகை தீபம் முடி​வ​டைந்​ததை அடுத்து மணிலா விதைப்பை தீவி​ரப்​ப​டுத்​தி​யுள்​ள​னர். ​
 
                   இ​து​கு​ றித்து மாளி​கம்​பட்டு விவ​சாயி ஆறு​மு​கம் கூறி​யது:​ கார்த்​திகை தீபத்​துக்கு முன் மணிலா விதைத்​தால் மழை​யால் சேதம் அடை​யும். இத​னால் தீபம் முடிந்து தான் மணிலா விதைப்பு தீவி​ரம் அடை​யும். ஆள் பற்​றாக் குறை​யால் மணிலா விதைப்பு பாதிப்​ப​டைந்​துள்​ளது. விவ​சா​யத் துறை மூலம் சான்று அளிக்​கப்​பட்ட மணிலா விதை கிடைக்​க​வில்லை. இத​னால் தனி​யா​ரி​டம் இருந்து வாங்கி விதைக்​கின்​றோம். இதன் முளைப்​புத் தன்மை மற்​றும் காய்ப்பு திறன் போகப்​போ​கத்​தான் தெரி​யும் என விவ​சாயி ஆறு​மு​கம் கூறி​னார்.
 
              இது குறித்து வேளாண்மை உதவி இயக்​கு​னர் பி.ஹரி​தாஸ் கூறி​யது:​ மணிலா விதைப்பு பரு​வத்​துக்​காக பண்​ருட்டி வட்​டத்​துக்கு 2 டன் மணிலா விதை பெறப்​பட்டு,​ கடந்த 15 நாள்​க​ளுக்கு முன்​னரே விவ​சா​யி​க​ளுக்கு விநி​யோ​கம் செய்து விட்​டோம். தற்​போது விதை இருப்பு இல்லை என்​றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior