உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

நெல்​லிக்​குப்​பம் ரயில் நிலை​யம் அருகே ​சாலை​யோர வீடு​கள் பிரச்னை:​ எம்.பி. முயற்​சி​யால் தீர்வு



கட​லூர்,​ டிச. 6:​ 
 
                          நெல்​லிக்​குப்​பம் ரயில் நிலை​யம் அருகே ரயில்வே ஃபீ​டர் சாலை​யோ​ரம் வசிப்​ப​வர்​கள் பிரச்​னைக்கு,​ கட​லூர் மக்​க​ளவை உறுப்​பி​னர் கே.எஸ்.அழ​கி​ரி​யின் முயற்​சி​யால் ஞாயிற்​றுக்​கி​ழமை தீர்வு காணப்​பட்​டது. ​ ​
 
                     நெல்​லிக்​குப்​பம் ரயில்வே ஃபீ​டர் சாலை​யோ​ரம் 200க்கும் மேற்​பட்ட வீடு​கள் உள்​ளன. இவற்​றில் 40 வீடு​கள் ரயில்வே ஃபீ​டர் சாலை​யை​யொட்டி அமைந்து உள்​ளன. இவற்​றில் வசிப்​போர் 60 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக ரயில்வே ஃபீ​டர் சாலை​யையே தங்​கள் பொதுப் பாதை​யா​கப் பயன்​ப​டுத்தி வந்​த​னர். ​
 
                          இந்த நிலை​யில் விழுப்​பு​ரம்-​ மயி​லா​டு​துறை அகல ரயில் பாதைத் திட்​டத்​தில் பல ரயில் நிலை​யங்​க​ளுக்கு சுற்​றுச்​சு​வர் கட்​டப்​பட்டு வரு​கி​றது. நெல்​லிக்​குப்​பம் ரயில் நிலை​யத்​தி​லும் ரயில்வே ஃபீ​டர் சாலை​யை​யொட்டி வடக்​குப் பகு​தி​யில் 300 மீட்​டர் நீளத்​துக்கு மதில்​சு​வர் கட்​டும் பணி தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதில் ஆக்​கி​ர​மித்து கட்​டப்​பட்ட பல வீடு​க​ளின் பகு​தி​கள் இடித்து அகற்​றப்​பட்​டன. மதில் சுவ​ரும் சிறிது தூரத்​துக்​குக் கட்​டப்​பட்​டது. இத​னால் 40-க்கும் மேற்​பட்ட வீடு​க​ளில் வசிப்​போர் பாதிக்​கப்​பட்​ட​னர் இந்த வீடு​க​ளில் யாரா​வது இறந்​தால்​கூட சட​லத்தை வெளியே கொண்​டு​வர முடி​யாத நிலை ஏற்​பட்டு இருப்​ப​தாக அப்​ப​குதி மக்​கள் தெரி​வித்​த​னர்.  
 
                  மே​லும் இப்​ப​கு​தி​யில் உள்ள 10-க்கும் மேற்​பட்ட மாட்​டி​றைச்​சிக் கடை​க​ளால் ரயில் பய​ணி​கள் பாதிக்​கப்​ப​டு​வ​தா​க​வும் புகார் தெரி​விக்​கப்​பட்​டது. இப்​பி​ரச்​னை​கள் தொடர்​பாக பாதிக்​கப்​பட்ட மக்​கள் கட​லூர் மக்​க​ளவை உறுப்​பி​னர் கே.எஸ்.அழ​கி​ரி​யி​டம் முறை​யிட்​ட​னர். ​ ​
 
                அப்​ப​குதி மக்​க​ளின் வேண்​டு​கோளை ஏற்று,​ பிரச்​னைக்கு உரிய இடத்தை கே.எஸ்.அழ​கிரி ஞாயிற்​றுக்​கி​ழமை பார்​வை​யிட்​டார். இதற்​காக கே.எஸ்.அழ​கி​ரி​யின் வேண்​டு​கோளை ஏற்று,​ திருச்சி ரயில்வே கோட்ட மேலா​ளர் சுப்​பி​ர​ம​ணி​ய​மும் சிறப்பு ரயி​லில் நெல்​லிக்​குப்​பம் வந்​தார்.   இரு​வ​ரின் வரு​கை​யை​யொட்டி அப்​ப​குதி மக்​கள் பெரு​ம​ள​வில் அங்கு திரண்​ட​னர். இரு​வ​ரும் பொது​மக்​கள் பிர​தி​நி​தி​க​ளைச் சந்​தித்​துப் பேசி​னர். ​
 
                        பின்​ னர் அழ​கிரி எம்.பி. செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ பாதிக்​கப்​ப​டும் வீடு​க​ளுக்​காக 5 அடி நிலம் விட்​டுக் கொடுக்​கு​மாறு ரயில்வே அதி​கா​ரி​க​ளி​டம் தெரி​வித்து இருக்​கி​றேன்.   ரயில் நிலை​யத்​தின் தெற்​குப் பகு​தி​யில் உள்​ள​வர்​க​ளின் பிரச்​னை​யைத் தீர்க்க,​ அங்கு வழி​விட்டு ரயில்வே மதில் சுவர் கட்​டு​மாறு தெரி​வித்​தேன். பாதிப்பை ஏற்​ப​டுத்​தும் மாட்​டி​றைச்​சிக் கடை​களை அகற்​றி​னால் இந்​தக் கோரிக்​கை​க​ளைப் பரிசீ​லிப்​ப​தாக கோட்ட மேலா​ளர் தெரி​வித்​தார். மாட்​டி​றைச்​சிக் கடை​களை 10 நாளில் அப்​பு​றப்​ப​டுத்​து​வ​தாக நக​ராட்​சித் தலை​வர் உறுதி அளித்​தார். உயர் அதி​கா​ரி​க​ளு​டன் விவா​தித்து சாத​க​மான முடிவை எடுப்​ப​தாக கோட்ட மேலா​ளர் உறுதி அளித்து உள்​ளார் என்​றார் அழ​கிரி. ​
 
          எம்எல்ஏ சபா.ராஜேந்​தி​ரன்,​ நக​ராட்​சித் தலை​வர் கெய்க்​வாட்​பாபு,​ உத​விக் கோட்ட மேலா​ளர் செல்​வ​ராஜ்,​ ஆர்.வி.என்.எல். உத​விப் பொது மேலா​ளர் ரெட்டி,​ நெல்​லிக்​குப்​பம் உள்​ளிட்​டோர் உடன் இருந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior