உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

கொலை வழக்கு​ தந்தை,​​ மக​ளுக்கு ஆயுள் சி​றை

கடலூர்,​​ டிச.8:​ 

                சொத்​துத் தக​ரா​றில் பெண் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் தந்தை,​​ மக​ளுக்கு கட​லூர் மாவட்ட மக​ளிர் நீதி​மன்​றம் செவ்​வாய்க்​கி​ழமை ஆயுள் சிறைத் தண்​டனை விதித்​தது.​ ​

              கு​றிஞ்​ சிப்​பா​டியை அடுத்த கல்​கு​ணம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் பாலு ​(55).​ அவ​ரது மகள் சத்​தியா ​(22).​ சத்​தி​யாவை கல்​கு​ணத்​தைச் சேர்ந்த வேலா​யு​தம் மகன் கன​க​வே​லுக்​குக் திரு​ம​ணம் செய்து கொடுத்து இருந்​த​னர்.​

              தி​ரு​ம​ணம் ஆன சிறிது நாளில் கன​க​வேல் குடும்​பத் தக​ரா​றில் தற்​கொலை செய்து கொண்​டார்.​ ​

                 எ ​னவே பாலு அவ​ரது மனைவி உஷா​ராணி ​(50),​ மகள் சத்​தியா ஆகி​யோர் சேர்ந்து கன​க​வே​லு​வின் வீட்​டுக்​குச் சென்று,​​ சொத்​தில் ஒரு பகு​தியை சத்​தி​யா​வுந்க்கு எழுதி வைக்​கு​மாறு வேலா​யு​தத்​தின் குடும்​பத்​தி​னரை வற்​பு​றுத்​தி​னர்.​ ​ ​

              இ​தில் அவர்​க​ளுக்​குள் தக​ராறு ஏற்​பட்டு வேலா​யு​தத்​தின் மனைவி அமுதா ​(50) எரித்​துக் கொல்​லப்​பட்​டார்.​ இந்த சம்​ப​வம் 14-1-2009 அன்று நடந்​தது.​ ​ ​கொலை தொடர்​பாக பாலு,​​ உஷா​ராணி,​​ சத்​தியா ஆகி​யரை குறிஞ்​சிப்​பாடி போலீ​ஸôர் கைது செய்து நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​த​னர்.​ வழக்கை கட​லூர் மாவட்ட மக​ளிர் நீதி​மன்ற நீதி​பதி அசோ​கன் விசா​ரித்து செவ்​வாய்க்​கி​ழமை தீர்ப்​புக் கூறி​னார்.​

                   குற் ​றம் சாட்​டப்​பட்ட பாலு,​​ சத்​தியா ஆகி​யோ​ருக்கு ஆயுள் சிறைத் தண்​டனை விதித்​தார்.​ குற்​றம் நிரூ​பிக்​கப்​ப​டா​த​தால் உஷா​ராணி விடு​தலை செய்​யப்​பட்​டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior