உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

திற​மைக்​கோர் திரு​விழா

சிதம்ப​ரம்,​  டிச. 6:​ 

                               சிதம்​ப​ரம் ஹோட்​டல் சார​தா​ரா​மின் 21-ம் ஆண்டு விழாவை முன்​னிட்டு சிதம்​ப​ரம் பள்​ளி​க​ளுக்கு இடை​யே​யான திற​மைக்​கோர் திரு​விழா என்ற பெய​ரில் கலைப் போட்​டி​கள் நடத்​தப்​பட்​டன. அதன் பரி​ச​ளிப்பு விழா அண்​மை​யில் நடை​பெற்​றது. ந​ட​னப் போட்டி,​ குழு​ந​ட​னப் போட்டி,​ சிறு​வர்​கள் பாடல் போட்டி,​ மாறு​வே​டப் போட்டி,​ கவி​தைப் போட்டி,​ ஓவி​யப் போட்டி உள்​ளிட்ட 6 வித​மான போட்​டி​கள் நடை​பெற்​றன. 15க்கும் மேற்​பட்ட பள்​ளி​க​ளைச் சேர்ந்த 200க்கும் மேற்​பட்ட மாணவ,​ மாண​வி​ய​கள் போட்​டி​யில் பங்​கேற்​ற​னர். இ​தில் குரு​ஞான சம்​பந்​தர் பள்ளி மாணவி ஆர்.அபி​ராமி ​(சிறு​வர்​கள் பாடல் போட்டி)​,​ எடி​சன் ஜி.அகோ​ரம் நினை​வுப் பள்ளி எஸ்.ஹரித்ரா ​(பாம்பு நட​னம்)​,​ வீனஸ் மெட்​ரிக் பள்ளி மாணவி ஆர்.பிரி​யங்கா ​(பரத நாட்​டி​யம்)​,​ காம​ராஜ் மெட்​ரிக் பள்ளி மாண​வி​யர்​கள் ​(குழு நட​னம்)​ ஆகி​யோர் பரி​சு​கள் பெற்​ற​னர். ப​ரி​ச​ளிப்பு விழா​வில் நிர்​வாக இயக்​கு​நர் ஆர்.எம்.சுவே​த​கு​மார் வர​வேற்​றார்.   அரிமா சங்​கத் தலை​வர் செந்​தில்​வே​லன்,​ சண்​மு​க​சுந்​த​கம்,​ இளை​ய​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பரி​சு​களை வழங்​கி​னர்.     

                போட்​டி​க​ளில் அதிக புள்​ளி​க​ளைப் பெற்ற காம​ராஜ் மெட்​ரிக் பள்​ளிக்கு சார​தா​ராம் கோப்பை-​2009 வழங்​கப்​பட்​டது.  விழா ஏற்​பா​டு​களை மேலா​ளர்​கள் முத்​து​வேல். ராஜ​சுந்​த​ரம்,​ சுரேஷ் ஆகி​யோர் செய்​தி​ருந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior