உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

அனைத்து ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளி​லும்​நிர்​வாக அலு​வ​லர்​களை நிய​மிக்​கக் கோரிக்கை

கட​லூர்,​  டிச. 5:​ 

                                 அனைத்து ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளி​லும் நிர்​வாக அலு​வ​லர்​களை நிய​மிக்க வேண்​டும் என்று தமிழ்​நாடு பொது சுகா​தா​ரத் துறை அமைச்​சுப் பணி அலு​வ​லர் சங்​கம் அர​சுக்​குக் கோரிக்கை விடுத்​துள்​ளது. ​

                   இச் ​சங்​கத்​தின் மாநில செயற்​கு​ழுக் கூட்​டம் கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்​தது. கூட்​டத்​தில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​

                      ஆ​ ரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளில் கோடிக்​க​ணக்​கில் பணப் புழக்​கம் உள்​ள​தால்,​ ​ நிர்​வாக அலு​வ​லர் பணி​யி​டங்​க​ளைத் தோற்​று​விக்க வேண்​டும். அனைத்து வட்​டார சுகா​தார நிலை​யங்​க​ளுக்​கும் அலு​வ​ல​கக் கட்​ட​டம் கட்ட நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். அனைத்து இள​நிலை உத​வி​யா​ளர்​க​ளுக்​கும் பதவி உயர்வு வழங்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளில் பணிச்​சுமை அதி​க​ரித்து உள்​ள​தால்,​ அயல் பணி​களை ரத்து செய்ய வேண்​டும். தாற்​கா​லிக இள​நிலை உத​வி​யா​ளர்​களை பணி​நி​ரந்​த​ரம் செய்ய வேண்​டும் என்​பவை உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கை​கள் அடங்​கிய தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன. ஏற்​கெ​னவே நிறை​வேற்​றப்​பட்ட கோரிக்​கை​க​ளுக்​காக முதல் அமைச்​ச​ருக்கு நன்றி தெரி​விக்​கப்​பட்​டது. புதிய ​ நிர்​வா​கி​கள் பாராட்​டப்​பட்​ட​னர். ​

                         கூட்​டத்​துக்கு மாநி​லத் தலை​வர் எஸ்.பி.தின​மணி தலைமை தாங்​கி​னார். மாநில பொதுச் செய​லா​ளர் ஞான​சே​க​ரன் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர். தமிழ்​நாடு அரசு அலு​வ​லர் ஒன்​றிய மாநி​லத் தலை​வர் கோ.சூரி​ய​மூர்த்தி சிறப்​புரை நிகழ்த்​தி​னார். சங்க நிர்​வா​கி​கள் சண்​மு​க​ரா​ஜன்,​ கார்​மே​க​வண்​ணன்,​ மோகன்​ராஜ்,​ செல்​வம்,​ கங்​கா​த​ரன்,​ பாஸ்​க​ரன்,​ அரங்க.ரகு த.சேகர் பேசி​னர். முத்​துக்​கிó​ருஷ்​ணன் வர​வேற்​றார். செங்​கேணி நன்றி கூறி​னார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior