உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

கிராம மக்​கள் உண்​ணா​வி​ர​தம்

கடலூர்,​​  டிச.7: ​ 
 
                மின் வாரி​யத்​தைக் கண்​டித்து பூண்டி ஊராட்​சி​யைச் சேர்ந்த பொது​மக்​கள் கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் திங்​கள்​கி​ழமை உண்​ணா​வி​ர​தம் இருந்​த​னர்.​
 
             பண்​ருட்டி வட்​டம் அண்ணா கிரா​மம் ஊராட்சி ஒன்​றி​யத்​துக்​குட்​பட்ட பூண்டி ஊராட்சி குச்​சிப்​பா​ளை​யம் கிரா​மத்​தில் மின்​கம்​பங்​க​ளுக்கு இடையே உள்ள கம்​பி​கள் 50 ஆண்​டு​க​ளுக்கு மேல் பழை​ய​தாக இருப்​ப​தால்,​​ ​ எந்த நேரத்​தி​லும் அறுந்து விழும் நிலை​யில் இருப்​ப​தாக கிராம மக்​கள் புகார் தெரி​விக்​கி​றார்​கள்.​ 
 
           இ​த​னால் அப்​ப​குதி மக்​கள் பெரி​தும் பீதி அடைந்​துள்​ள​னர்.​ மேலும போதிய மின் அழுத்​தம் இல்​லா​த​தால் பல நேரங்​க​ளில் இக்​கி​ரா​மம் இரு​ளிóல் மூழ்​கிக் கிடக்​கி​றது.​ 
 
              கட்​ட​முத்​துப்​பா​ளை​யம் ஆற்​றுத் தெரு​வில் 30 வீடு​கள் உள்​ளன.​ அவற்​றில் 13 வீடு​க​ளுக்கு மின் இணைப்பு வழங்​கப்​பட்டு உள்​ளது.​ மீதி வீடு​க​ளுக்கு பல ஆண்​டு​க​ளாக விண்​ணப்​பித்​தும் மின் இணைப்பு ​ கிடைக்​க​வில்லை.​     எனவே அனைத்து வீடு​க​ளுக்​கும் மின் இணைப்பு வழங்க வேண்​டும்,​​ மின்​கம்​பி​களை மாற்ற வேண்​டும்,​​ ​ மின் அழுத்​தம் சீராக இருக்க வேண்​டும் என​கோரி உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் நடந்​தது.​÷ ஊராட்சி மன்​றத் துணைத் தலை​வர் பெ.அரி​கி​ருஷ்​ணன் தலைமை வகித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior