உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

துல்​லியப் பண்​ணைய திட்​டம் மூலம் தோட்​டக்​கலை பயிர் சாகு​படி

சிதம்​ப​ரம்,​ டிச. 5:​ 

                                 சிதம்​ப​ரத்தை அடுத்த பரங்​கிப்​பேட்டை வட்​டா​ரத்​தில் தமிழ்​நாடு வேளாண்மை வளர்ச்சி திட்​டத்​தில் துல்​லிய பண்​ணைய திட்​டம் மூலம் தோட்​டக்​கலை பயிர்​கள் சாகு​படி செய்ய திட்​ட​மி​டப்​பட்​டுள்​ள​தாக உதவி வேளாண் இயக்​கு​நர் ராஜ​ரா​ஜ​சோ​ழன் தெரி​வித்​துள்​ளார்.

                 இ​து​கு​றித்து அவர் வெளி​யிட்​டுள்ள பத்​தி​ரிகை செய்தி:​ துல்​லிய பண்​ணைய வேளாண் திட்​டத்​தில் ஒரு ஹெக்​டேர் நிலம் உடைய 10 வேளாண் பெரு​மக்​கள் ஒரு குழு​வாக ஒருங்​கி​ணைந்து ஓராண்டு வாழை அல்​லது காய்​கறி உள்​ளிட்ட தோட்​டக்​கலை பயிர்​கள் சாகு​படி செய்​ய​லாம். இதற்கு மத்​திய,​ மாநில அரசு நுண்​ணீர் பாசன அமை​விற்கு ரூ.40 ஆயி​ரம் மற்​றும் கரை​யும் உரங்​கள் ரூ.30 ஆயி​ரம் உள்​ளிட்ட ரூ.70 ஆயி​ரத்தை மானி​ய​மாக வழங்​கு​கி​றது.

                  வி​வ​சா​யி​கள் இத்​திட்​டத்​தின் மூலம் பயன்​பெற நில உடைமை சிட்டா,​ சாகு​படி விவர அடங்​கல்,​ அடை​யாள அட்டை நகல்,​ வயல் விபர வரை உள்​ளிட்ட ஆவ​ணங்​க​ளு​டன் அருகே உள்ள உதவி வேளாண் அலு​வ​லரை தொடர்பு கொள்ள வேண்​டும் என ராஜ​ரா​ஜ​சோ​ழன் தெரி​வித்​துள்​ளார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior