உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

கட​லூர் சிறை​யில் ஆயுள் கைதி தற்​கொலை

கடலூர்,​​ ​ டிச.7: ​ 
 
                    கட​லூர் மத்​திய சிறை​யில் ஆயுள் தண்​ட​னைக் கைதி திங்​கள்​கி​ழமை பினா​யில் குடித்​துத் தற்​கொலை செய்து கொண்​டார்.​ 
 
            விழுப்​பு​ரம் மாவட்​டம்,​​ தேர்​கு​ணம் கிரா​மம் மாரி​யம்​மன் கோயிóல் தெரு​வைச் சேர்ந்த பூங்​கா​வ​னத்​தின் மகன் பாலு ​(26).​ கிளி​ய​னூர் போலீஸ் சர​கத்​தில் நடந்த கொலை வழக்​கில் பாலு​வுக்கு 2006-ல் ஆயுள் சிறைத் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.​ அவர் கட​லூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்டு இருந்​தார்.​÷இந்​நி​லை​யில் திங்​கள்​கி​ழமை காலை சிறைச்​சாலை வளா​கத்​தில் மயங்​கிக் கிடந்​தார்.​ கழி​வ​றையை சுத்​தம் செய்ய ​ வைத்து இருந்த பினா​யிலை அவர் குடித்​த​தைத் தொடந்து அவர் மயக்​கம் அடைந்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ உடனே அவ​ரைக் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்த்​த​னர்.​ அங்கு பாலு இறந்​தார்.​
 
             அரசு மருத்​து​வ​ம​னை​யில் கட​லூர் கோட்​டாட்​சி​யர் செல்​வ​ராஜ் முன்​னி​லை​யில் பாலு​வின் பிரே​தப் பரி​சோ​தனை நடந்​தது.​ கட​லூர் நக​ராட்சி துணைத் தலை​வர் தாம​ரைச்​செல்​வன்,​​ கோட்​டாட்​சி​ய​ரி​டம் கோரிக்கை மனு ஒன்றை அளித்​தார்.​ மன​நிலை பாதிக்​கப்​பட்ட நிலை​யில் பாலு இருந்​தி​ருக்​கி​றார்.​ எனவே அவ​ரது பெற்​றோ​ருக்கு அரசு நிவா​ர​ணம் வழங்க வேண்​டும என்று மனு​வில் கோரி​யுள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior