உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

விழுப்​பு​ரம்-​ மயி​லா​டு​துறை அக​லப் பாதை​யில் ​ சரக்கு ரயில் போக்​கு​வ​ரத்து விரை​வில் தொடங்​கும்

கட​லூர்,​  டிச. 6:​ 
                     விழுப்​பு​ரம் மயி​லா​டு​துறை அகல ரயில் பாதை​யில் விரை​வில் சரக்கு ரயில் போக்​கு​வ​ரத்து தொடங்​கும் என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலா​ளர் சுப்​பி​ர​ம​ணி​யம் தெரி​வித்​தார்.
 
                    நெல்​ லிக்​குப்​பம் ரயில் நிலை​யத்​துக்கு சுற்​றுச்​சு​வர் கட்​டு​வ​தில் எழுந்த பிரச்னை தொடர்​பாக ஆய்வு செய்​வ​தற்​காக சுப்​பி​ர​ம​ணி​யம் ஞாயிற்​றுக்​கி​ழமை நெல்​லிக்​குப்​பம் வந்​தார். அங்கு அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​
 
         வி​ழுப்​பு​ரம்-​மயி​லா​டு​துறை அகல ரயில் பாதைத் திட்​டம் முடி​வ​டை​யும் தரு​வா​யில் உள்​ளது. விரை​வில் சரக்கு ரயில்​கள் இயக்​கப்​ப​டும். ரயில்வே நிலங்​க​ளில் ஆக்​கி​ர​மிப்​பு​கள் படிப்​ப​டி​யாக அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யப் பகு​தி​யில் உள்ள ஆக்​கி​ர​மிப்​பு​க​ளும் அகற்​றப்​ப​டும். இரட்டை ரயில்​பாதை திட்​டம் அம​லா​கும்​போது அனைத்து ஆக்​கி​ர​மிப்​பு​க​ளும் அகற்​றப்​பட்டு விடும். ​ ​
 
 தி​ருப்​பாப்பு​லி​யூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப்​பதை அத்​தி​யா​வ​சி​யம் என்றே கரு​து​கி​றோம். சுரங்​கப்​பாதை அமைக்க ரயில்வே இலாகா தயா​ராக இருக்​கி​றது. ​ ஆனால்,​ இதற்​காக மாநில அர​சி​டம் இருந்து உறு​தி​செய்​யும் கடி​தம் எது​வும் வர​வில்லை. திருப்​பாப்பு​லி​யூர் சுரங்​கப்​பாதை தொடர்​பாக நானும் தமி​ழக நெடுஞ்​சா​லைத்​துறை அதி​கா​ரி​கள் உள்​ளிட்ட பல அதி​கா​ரி​க​ளி​டம் பேசி இருக்​கி​றேன் என்​றார் சுப்​பி​ர​ம​ணி​யம். ​
 
           தி​ருப்​பாப்பு​லி​யூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப்​பாதை அமைக்க வலி​யு​றுத்தி,​ கட​லூர் பொது​நல அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் எம்.நிஜா​மு​தீன்,​ வெண்​புறா குமார்,​ வழக்​க​றி​ஞர்​கள் திரு​மார்​பன்,​ மன்​ற​வா​ணன்,​ கவி​ஞர் பால்கி,​ சி.ஏ.தாஸ்,​ கதிர்​ம​ணி​வண்​ணன்,​ தங்க சுதர்​ச​னம்,​ துரை​வேலு உள்​ளிட்​டோர் திருச்சி கோட்ட ரயில்வே மேலா​ளர் சுப்​பி​ர​ம​ணி​யத்​தைச் சந்​தித்து கோரிக்கை அளித்​த​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior