உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

மனித மேம்பாட்டில் கடலூர் மாவட்டத்திற்கு 16வது இடம்: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர்: 

                    கடலூர் மாவட்டத்தில் மனித மேம்பாட்டு அறிக்கையின் அடிப்படையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினார். 

இது குறித்து மனித மேம்பாட்டு திட்ட இயக்குனர் செல்வராஜன் நேற்று கடலூரில் கூறியதாவது: 

         அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநிலத் திட்டக்குழு இணைந்து தயாரிக்கப்பட்ட மனித மேம்பாட்டு அறிக்கையை கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பான கருத்துக்களை அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் விதமாக கலெக்டர் தலைமையில் மாவட்ட உயர் மட்ட அதிகாரிகளுடனான கருத்து பரப்பு கூட்டம் நடந்தது. கடந்த 2003ம் ஆண்டு மாநில திட்டக்குழு வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கைபடியும், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரங்கள் அடிப்படையாகக் கொண்டு குறியீடு தயார் செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் கடலூர் மாவட்டம் 16வது இடத்தில் உள்ளது.

                         இந்த அறிக்கை மாவட்டத்தில் மனித மேம்பாடு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் சிறந்த மாவட்டமாக விளங்கவும், திட்டங்களை தயாரிக்கவும், உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது: 

                             இந்த அறிக்கை அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் பின்பற்றி திட்டங்களை தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நல்லூர் ஒன்றியத்தில் இறந்து பிறக்கும் குழந்தைகளின் சதவீதம் 21.7 ஆக உள்ளது. குமராட்சியில் சிறு குழந்தைகள் இறப்பு 43.6 சதவீதமாக உள்ளது. பண்ருட்டி பகுதியில் குழந்தைகள் பிறப்பு சதவீதம் 14 சதவீதம் அதிகமாக உள்ளது. இது போன்ற குறியீடுகளை வைத்து குறைபாடுகள் உள்ள இடத் தில் அவற்றை போக்க மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட் டுள்ளனர் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior