உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

திருட்டு, கொலை வழக்கில் சிறை சென்றவர் மீண்டும் கைது

நெல்லிக்குப்பம்: 

                         பல்வேறு திருட்டு, கொலை வழக்கில் சிறை சென்றவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். நெல்லிக்குப்பம் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் தலைமையில் போலீசார் வானமாதேவி பகுதியில் வாகன சோதனைசெய் தனர். அப்போது போலீசார் சைகை காட்டியும், பைக்கில் சென்ற இருவர் நிறுத்தாமல் சென்றனர். போலீசார் விரட்டி பிடித்து விசாரணை செய்தபோது அந்த பைக்கை நெல்லிக்குப்பத்தில் திருடியதும், அதை ஓட்டி வந்தவர் திருக்கண்டேஸ்வரம் குருசாமி (28), விஸ்வநாதபுரம் கோபி (26) எனவும் தெரிய வந்தது.  இதில் கோபி மருதாடு கூட்டுறவு வங்கி காவலர் கொலை, பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகளில் பலமுறை சிறை சென்றவர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து குருசாமி, கோபி ஆகியோரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior