உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

பேனர்களை முறைப்படுத்த அனைத்து கட்சி கூட்டம்

பண்ருட்டி: 

                  பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் களை முறைப்படுத்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பண்ருட்டி போலீஸ் சரகத்திற்குட் பட்ட பகுதியில் டிஜிட்டல் பேனர்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. டி.எஸ்.பி., பிரசன்னகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் செல்வம், பாண்டியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசியல் கட்சியினர் தட்டி, டிஜிட்டல் பேனர்களை நகராட்சி, பேரூராட்சி அனுமதி பெற்று வைக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு முன் மூன்று நாட்களுக்கும், பின் இரண்டு நாட்களுக்கும் மொத்தம் ஐந்து நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனுமதிக் கப்பட்ட பேனர்களுக்கு குறிப்பிட்ட அரசியல் கட்சியினரே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நாட்களை மீறி பேனர்கள் அகற்றப்படாவிட்டால் நகராட்சி, போலீசார் இணைந்து பேனர்களை அகற்றுவர் என அறிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior