உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

திட்டக்குடியில் அரசியல் விளம்பர போர்டுகள் தொண்டர்களை குஷிப்படுத்த போட்டா- போட்டி

திட்டக்குடி: 

                       திட்டக்குடியில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினரின் பலத்தை நிரூ பிக்க போட்டி போட்டுக் கொண்டு விளம்பர போர்டு வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர் வாகிகளை தி.மு.க., தன்வசம் இழுக் கும் பணியில் முழு மூச்சில் இறங் கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,விற்கு தாவிய சிலரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியும், சிலரது நடவடிக்கைகளை கூர்ந்தும் கவனித்து வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. உண்மையான விசுவாசிகளுக்கு கூடுதல் பொறுப்பும், சிலருக்கு அதே பொறுப்பும், புதிய நிர்வாகிகள் பலரையும் நியமித்து கட்சிக்கு பலம் சேர்க்கும் வேலைகளையும் செய்து வருகிறார். இதனால் புதியதாக நியமிக்கப் பட்ட மற்றும் அதே பொறுப்பினை மீண்டும் பெற்ற நிர்வாகிகள் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும், பிறந்த நாளுக்கு வாழ்த்தியும் விளம்பர போர்டுகள் வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடலூர் லோக்சபா தொகுதியிலுள்ள திட்டக்குடி சட்டசபை தொகுதிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் சோர்வடைந்த கட்சித் தொண் டர்களை மீட்கவும், அ.தி.மு.க., கட்சி பலம் வாய்ந்த அணி என்பதை மாற்று கட்சியினருக்கு எடுத்துரைக்கும் விதமாக நன்றி மற்றும் பிறந்த நாள் வாழ்த்து பேனர்களை முக்கிய இடங்களான பஸ் நிலையம், கிருஷ்ணா பேலஸ் முகப்பு பகுதிகளில் வைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சியினரே பணத்தை வாரி இறைக்கும் போது, ஆளுங்கட்சி சும்மா இருந்தால் மாவட்ட செயலாளரிடம் டோஸ் விழும் நிலை ஏற்படும் என்பதால், ஆளுங்கட்சியினர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க அ.தி.மு.க.,வினர் போர்டு வைக்கும் இடங்களில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பிரம்மாண்ட போர்டுகள் வைத்து வருகின்றனர். ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ பல லட்சம் முதலீடு செய்த நமக்கு தினசரி வேலை வந்தால் சரிதான் என டிஜிட்டல் போர்டு தயாரிப்பாளர்கள் குஷியில் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior