உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

சென்னை உண்ணாவிரதத்தில் பங்கேற்க பி.எட்., பட்டதாரிகளுக்கு அழைப்பு

சிதம்பரம்: 

                           தமிழ்நாடு பொருளியல் மற்றும் வணிகவியல் பி.எட்., பட்டதாரிகள் சென்னை உண்ணாவிரதத்தில் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொருளியல் மற்றும் வணிகவியல் பி.எட்., பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் அருளழகன் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் 6 முதல் 8 வகுப்பு வரை பொருளியல் மற்றும் வணிகவியல் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்ககோரியும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு அதிகளவில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க கோரியும் வரும் 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த உண்ணாவிரதத்தில் பொருளியல் மற்றும் வணிகவியல் பி.எட்., பட்டதாரிகள் திரளாக பங்கேற்ற கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior