உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

விருத்தாசலம்: 

                   விருத்தாசலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தடைகளை தகர்த்தெறிவோம் என்ற தலைப்பில் பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. அரிமா சங்கத் தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். பொருளாளர் வக்கீல் பாலசந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம் வரவேற்றார். கோவையை சேர்ந்த கின்னஸ், லிம்கா சாதனையாளர் பிரதீப்குமார் மாணவர்களுக்கு தன்னம் பிக்கை, விடாமுயற்சி குறித்தும் பயிற்சி அளித்தார். அரிமா சங்க மண்டல தலைவர் ஜெய்சங்கர், வட்டார தலைவர் சுரேஷ் சந்த், பொருளாளர் சீனுவாசன், பள்ளி என்.சி.சி., ஆசிரியர் ராஜ்குமார், ரத்தின புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior