உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் நீதி கேட்டு கலெக்டரிடம் முறையீடு

சிறுபாக்கம்: 

                  மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் பகுதிகளில் தேவைகளை நிறைவேற்றிட நிதி ஒதுக்க வேண்டுமென கலெக்டரிடம் முறையிட்டனர். மங்களூர் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர்கள் கலெக்டர் சீத்தாராமனை நேரில் சந்தித்தனர். அப்போது ஊராட்சிகளுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது போல, ஒன்றிய கவுன்சிலர் பகுதிகளுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பின்தங்கிய பகுதியாக இருப்பதால் ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது துணை சேர்மன் சின்னசாமி, கவுன்சிலர்கள் சந்திரபாபு, சேகர், கல்யாணி, அம்பிகா, ராஜன், பொன்முடி உட்பட பலர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior