உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடிந்துவிடும்: கலெக்டர்

கடலூர்: 

              கடலூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முடிக்கப்படும் என கலெக்டர் கூறினார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: 

                        கடலூர் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது. மழைக்காலமாக இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. அதன் காரணமாக பணிகளை துரிதப்படுத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன். அதில், இதுவரை பணிகள் துவங்காமல் உள்ள 24 தெருக்களில் 8081 மீட்டர் பணிகள் உடனே துவக்கப்படும். 66 தெருக்களில் 22479 மீட்டர் முழுமையாக முடியவில்லை. மொத்தமுள்ள 5412 மேனுவலில் 5120 முடிக்கப்பட்டுள்ளன. 15050 வீட்டு இணைப்புகளில் 13390 முடிக்கப்பட் டுள்ளன. இதுவரை 152.69 கி.மீ., குழாய் கள் பதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 27 கி.மீ., குழாய் பதிக்க வேண்டும். மேனுவல் (ஆளிறங்கும் குழிகள்), வீட்டு இணைப்பு ஆகியவற்றால்தான் சாலை போடும் பணி தாமதமாகி வருகிறது. சிமென்ட் சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் முடிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதுவரை 85 சதவீத பணிகள் முடிந் துள்ளன. இன்னும் 15 சதவீதம்தான் பாக்கியுள்ளன. இத்திட்டத்திற்கான திட்டமதிப்பீட்டு தொகை 66 கோடியில் இதுவரை 19.96 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் பணிகள் முழுவதும் முடிக்கப்படும் என்றார். குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் ரகுநாத், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், துணைச் சேர்மன் தாமரைச்செல்வன் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior