உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கடலூர்: 

                       அரசு கல்லூரிகளை ஒருமை வகை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளை ஒருமைவகை பல்கலைக் கழகங்களாக (தன்னாட்சி அதிகாரம்) மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனைக் கண்டித்து கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கோரிக்கை மனுவை மாணவ பிரதிநிதிகள் கலெக்டர் சீத்தாராமனை சந்தித்து மனு கொடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior