உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

அரசு ஊழியர் சங்கத்தினர் பிரசாரம்


திட்டக்குடி: 

                     திட்டக்குடி தாலுகாவில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை விளக்கி பிரசார இயக்கம் மேற்கொண்டனர்.

                      தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊதிய குறைபாடுகளை களைந்திட நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கையினை உடனடியாக வெளியிடவும், 2006 ஜனவரி முதல் ஊதியம் நிர்ணயம் செய்து, நிலுவைத்தொகையை ஒரே தவணையில் வழங்கிட வேண்டும். காலிபணியிடங்களை காலமுறை ஊதியத்தில் முறையான நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் கடந்த 15 முதல் 25 வரை நடந்து வருகிறது. திட்டக்குடி தாலுகா அலுவலக ஊழியர்களிடம் வட்டத்தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் பிரசாரம் செய்யப் பட்டது.வட்ட துணைத்தலைவர் அண்ணா துரை, மாவட்டத் தலைவர் காசிநாதன், இணை செயலாளர் கோவிந்தராஜ், வட்ட செயலாளர் நாட்டுதுரை முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior