உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

வீடு, நிலம் வழங்கியோர் மறியல்

நெய்வேலி:
 
                என்.எல்.சி. நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு, நிலம் வழங்கியோர்  அதற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரியும், அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தியும் மந்தாரக்குப்பம் பகுதியில் கடலூர் - விருத்தாசலம் சாலையில்  மார்க்கத்தில்  செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
 
               என்.எல்.சி. நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு நிலம் வழங்கியுள்ள கீழக்குப்பம், கெங்கைகொண்டான், உய்யக்கொண்டராவி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 120 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்துக்கு கெங்கைகொண்டான் பேரூராட்சித் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.÷இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு வந்த நெய்வேலி டி.எஸ்.பி. மணி தலைமையிலான போலீஸôôர், சாலை மறியலில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார்ருக்கும், கிராம மக்களுóக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் அனைவரையும் அப்புறப்படுத்திய   போலீசார் அருகிலுள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு வந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ராமராஜு, விருத்தாசலம் வட்டாட்சியர் ஜெயராமன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெபமணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், இப் பிரச்னைக்கு என்.எல்.சி. நிறுவனத்தின்  தலைவரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே, இப் போராட்டத்துக்கு ஆதரவாக நெய்வேலி மந்தாரக்குப்பம் வணிகர்களும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior