உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

புவனகிரி: 

                      புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியில் தேசிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் நடந்த தேசிய சுற்று சூழல் விழிப்புணர்வு முகாமில் தட்ப வெப்ப மாற்றம் குறித்து பயிற்சியும், விழிப் புணர்வு பேரணியும் நடந் தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். புவனகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் பங்கேற்று பேசினார். மாவட்ட சாரண அமைப்பாளர் பேரணியை துவக்கி வைத்தார். சாரண மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். ஆசிரியர் ராதாகிருஷ் ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior