உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கடலூர் மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு

கடலூர்: 

                     தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் 14 கோல்கள் போட்டு சாதனை படைத்த கடலூர் முதுநகர் மகளிர் பள்ளி மாணவி சுமித்ரா இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த் வானில் நடந்த தேசிய மகளிர் (மிக இளையோர்) கால்பந்து போட்டியில் தமிழகத்தின் சார்பில் கடலூர் முதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவிகள் சுமித்திரா, பிரவீணா பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றனர். மேலும் ஒட்டுமொத்த போட்டியில் 14 கோள்கள் போட்டு சாதனை செய்த சுமித்ரா இந்திய அணிக்கு (மிக இளையோர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் நடந்த தேசிய ஊரக விளையாட்டு மகளிர் கால்பந்து போட்டியில் இப்பள்ளியின் பிளஸ் 1 மாணவிகள் இந்துமதி, பிரதீபா தங்க பதக்கம் வென்றனர். அவுரங்காபாத்தில் நடந்த தேசிய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் மாணவிகள் சுபத்திரா, இந்துமதி, பிரதீபா, பிரவீனா ஆகியோர் இடம்பெற்றனர். கால்பந்து போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி மாணவிகளை பாராட்டினார். பின்னர் வேர்ல்டு விஷன் சார்பில் அமைக்கப்பட்ட தானியங்கி நாப்கின் மிஷினை முதன்மை கல்வி அலுவலர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், கால்பந்து அணி பயிற்சியாளர் மாரியப்பன், வேர்ல்டு விஷன் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior