உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன், நினைவாற்றல் பயிற்சி

திட்டக்குடி: 

                   திட்டக்குடி அடுத்த இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் மற்றும் நினைவாற்றல் பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி செயலாளர் சிவராமசேது தலைமை தாங்கினார். பள்ளித்தலைவர் கொத்தட்டை ஆறுமுகம், அரிமா செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

                        தலைமை ஆசிரியர் மயில்வாகனன் வரவேற்றார். பெண்ணாடம் அரிமா சங்க தலைவர் குலைதாசன் துவக்கி வைத்தார். பள்ளி பொருளாளர் திருஞானசம்பந்தம் வாழ்த்தி பேசினார். இதில் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நெய்வேலி உதயகுமார் ஆளுமைத்திறன் வளர்ச்சி, தேர்வினை எதிர்கொள்வது குறித்து ஒலி, ஒளி காட்சியுடன் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். முகாமில் ஆசிரியர்கள் சிவகாமி, ராஜா, செல்வகுமார், அனிதா, முத்தமிழன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் தெய்வாணை நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior