உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

நெய்வேலி நிர்வாகத்தை கண்டித்து கெங்கைகொண்டானில் திடீர் மறியல்

நெய்வேலி: 

                   கெங்கைகொண்டான் பேரூராட்சி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களை என்.எல்.சி., நிறுவனத்தின் விரிவாக்க பகுதிகளுக்கு நில ஆர்ஜிதம் செய்ய கடந்த அக்டோபர் 5ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண் டும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், ஒரு சென்ட் வீட்டு மனைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 10 லட்சம் தர வேண்டும், வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க என். எல்.சி., நிர்வாகம் தடை இல்லா சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி சேர்மன் சக்திவேல் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் 500க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெய்வேலி டி.எஸ்.பி., மணி தலைமையில் இன்ஸ்பெக்டர் சேகர், குமார், சுப்புராயலு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி மறியலை கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., ராமராஜன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior