உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

மாணவர்கள் நலன் கருதி மின் நிறுத்தம் நேரம் மாற்றம்

நெல்லிக்குப்பம்: 

                     மாணவர்கள் நலன் கருதி மின்சார நிறுத்த நேரம் மாற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் தினமும் வெவ்வேறு நேரங்களில் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கடலூர், நெல்லிக்குப்பம் பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்தது. திடீரென கடந்த வாரம் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்சாரத்தை நிறுத்த துவங்கினர். தேர்வு நேரம் நெருங்குவதால் மாணவர்கள் படிப்பு காலையில் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பள்ளி செல்ல உணவு தயாரிப்பது சிரமமாக இருக்கிறது. காலையில் மின்சாரம் துண்டிக்க கூடாது என பெற்றோர் கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று நேற்று முன்தினம் முதல் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பெற் றோர் களும், மாணவர்களும் நிம்மதி அடைந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior