உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

சன்பிளவர் தொண்டு நிறுவனத்தில் பண மோசடி நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு

கடலூர்: 

                       பண மோசடி செய்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடுவீரப்பட்டு சுய உதவிக்குழுவினர் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தனர்.

இது குறித்து நடுவீரப்பட்டு சிற்பி, முத்தமிழ், பாரதி ஆடவர் சுயஉதவிக் குழுவினர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                          கடலூர் அடுத்த நடுவீரப்பட்டில் சிற்பி, முத்தமிழ், பாரதி உள்ளிட்ட மூன்று ஆடவர் சுயஉதவிக் குழுவினர் 36 பேர் உள்ளனர். மூன்றுக் குழுக்களையும் கடலூர் தேவனாம்பட்டினம் சன் பிளவர் தொண்டு நிறுவனம் வழிநடத்தி வந்தது.

                       இந்த நிறுவனத்தின் நிறுவனர் தரணி மூன்று குழுக்களையும் இணைத்து "நியூடான் பேபரிக் பெடரேஷன்' என்ற சங்கத்தை உருவாக்கி அதற்கு கடலூர் விஜயா வங்கியில் கணக்கு துவக்கினார். இதில் சுனாமி மறுவாழ்வு நிதி மற்றும் சுனாமி அவசர கால நிதியில் இருந்து ஏழரை லட்சம் ரூபாய் மானியமும், வங்கி கடனாக ஏழரை லட்சம் ரூபாயும் சேர்த்து 15 லட்சம் ரூபாய் சங்கத்திற்கு கிடைத்தது. சங்க பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் வங்கியிலிருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த போது அதிலிருந்து தரணி 60 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் தரணி மற்றும் சங்க செயலாளர் ராஜ்குமார் சேர்ந்து சுயஉதவிக் குழுவின் பணம் ஆறரை லட்சம் ரூபாயை வங்கியிலிருந்து கையாடல் செய்துள்ளனர். இது குறித்து விஜயா வங்கி மேலாளர் தெரிவித்த பிறகுதான் எங்களுக்கு தெரிய வந்தது. இது குறித்து தரணியிடம் கேட்டால் அவர் எங்களை மிரட்டுகிறார். எந்த தகவலும் தர மறுக்கிறார். மோசடி செய்த தரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior