உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பதாக குடிபிரியர்கள் புலம்பல்

பரங்கிப்பேட்டை: 

                   பரங்கிப்பேட்டை பகுதி டாஸ்மாக் கடைகளில் பிராந்திகள் கூடுதல் விலைக்கு விற்பதாக குடிபிரியர்கள் புலம்புகின்றனர். பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம், தச்சக்காடு, கொத்தட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடை உள்ளன. இங்கு பிராந்தி உள்ளிட்ட சரக்குகளுக்கு அரசு விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக குடிபிரியர்கள் புலம்புகின்றனர். பீர், பிராந்தி, ஓல்டு மங்க், விஸ்கி, வி.எஸ். ஓ.பி., ஆகிய பிராண்டுகள் குவாட்டருக்கு அரசு விலையைவிட கூடுதலாக 2லிருந்து 3 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் விற்பனையாளருக்கும், குடிபிரியருக்கும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால் டாஸ்மாக் அதிகாரிகள் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிபிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior