உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:
 
                      அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள வெஸ்டேர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த சயன்ஸ் என்ற நிறுவனத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன், அமெரிக்கா வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி, காலேஜ் ஆஃப் பார்மசி முதல்வர் டேனியல் ராபின்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.÷பொறியியல் புல முதல்வர் பி. பழனியப்பன், மருந்தாக்கியல் துறைத் தலைவர் இரா. மணவாளன், பேராசிரியர்கள் பி.கே. மன்னா, ஜி.பி. மொகந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் இந்திய - அமெரிக்க மருந்து நடைமுறைகளை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பயனடையமுடியும்.÷அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறையில் மாணவர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். 
 
                           இந்தியாவிலேயே முதன்முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறையில் டி.பார்ஃம் என்ற பாடப் பிரிவு இந்திய மருந்தாக்கியல் குழுமத்தின் அங்கீகாரத்துடனும், பல்கலைக்கழக மானியக் குழு நிதிஉதவியுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பாடப் பிரிவானது 1200 படுக்கை வசதி மற்றும் பல்வேறு வசதிகள் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்று வருவதாக துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior